தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள்:
நெல் விதையின் தரம், நேர்த்தி இவற்றை ஆய்வு செய்யும் நிறுவனங்களை ஆடுதுறை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு முதலிய இடங்களில் அரசு நிறுவியுள்ளது. நெல்லைத் தவிர வாழை 4784 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 9013 ஹெக்டேரிலும், பருத்தி 1585 ஹெக்டேரிலும் விளைகிறது.
பட்டு நெசவு:
தஞ்சை மாவட்டத்தில் பட்டு நெசவு தாராசுரம், திருபுவனம், அம்மாப்பேட்டை, முதலிய இடங்களில் பெருமளவு செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் குடந்தைதான் முன் நிற்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்புடைய 7.5 இலட்சம் பட்டுப்புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இதன் மூலம் 25000 தொழிலாளிகள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 7.5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்க பார்டர் என்பதே குடந்தை பட்டின் தனித்தன்மை.
தொழில் வளர்ச்சி:
தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மைதான் முக்கியத் தொழில். அதனால் வேளாண்மையை சார்ந்தே பிற தொழில்கள் வளர்ந்தன. இன்றும்கூட வேளாண்மையை அடிப்படையாக வைத்துத் தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.
தஞ்சை:
தஞ்சாவூரில் டான்டெக்ஸ் உள்ளாடைகள் தொழிற்சாலை உடை தேவையை நிறைவு செய்கின்றன. தஞ்சாவூர் சர்க்கரை ஆலை, பெல் மெட்டல் யூனிட், ஈகான் மேக்கிங் லிமிடெட் போன்ற தொழிற்சாலைகளும், தஞ்சையை சுற்றிக் காணப்படுகின்றன. காகித பொம்மை தயாரித்தல், மெட்டி வேலை, இசைக்கருவிகள் தயாரித்தலும் முக்கிய கைத்தொழில்கள்.
கும்பகோணம்:
மைதீன் புகையிலை, தங்க விலாஸ் புகையிலை என்ற 2 பெரும் தொழிற்கூடங்களும், ஏ.ஆர்.ஆர். சீவல், பாக்கு, சுண்ணாம்பு தொழிற்கூடமும் பல தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வருகிறது. காளீஸ்வரி எவர்சில்வர் தொழிற்கூடம் போன்று பல சிறு தொழிற் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது. 100க்கு மேற்பட்ட சாக்பீஸ் தொழிற்சாலைகள் உள்ளன. பாரம்பரியமாகவே நகை வேலைகள், மளிகை, பித்தளை பாத்திரங்களுக்கான மொத்த சந்தையாக குடந்தை விளங்கி வருகிறது. மெழுகு திரி, பவர்லைட் சோப், உமி எண்ணெய் தொழிற்சாலை போன்றவையும் இங்கு உள்ளது. கும்பகோணமும், சுவாமிமலையும் சிற்ப வேலை செய்யும் தொழிலுக்கு புகழ் பெற்ற இடங்களாகும்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையைச் சுற்றி தென்னை நிறைந்து காணப்படுகிறது. அதனால் இங்கு கயிறு தொழிற்சாலை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இவ்வூர் பிரமுகர்கள் வி.நாடிமுத்துப்பிள்ளை, அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வானோலி குமாரவேல், நடிகர் விஜயகுமார், ராஜேஷ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பேராவூரணி:
பேராவூரணி வட்டத்தில் 85 பெருங் கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்குப் பேராவூரணியே மையமாக இருப்பதால் வணிக முக்கியத்துவம் மிகுந்து காணப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னந் தோட்டங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கும். அதனால் இளநீர், தேங்காய், கொப்பரை, மட்டை, போன்றவற்றின் துணைத் தொழில்களாக, கீற்று முடைவது, மட்டையிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரை, காயவைத்து தேங்காய் எண்ணெய் ஆட்டுவது போன்ற தொழில்கள் பேராவூரணியைச் சுற்றி நடைபெறுகிறது. தேங்காய் பவுடர் செய்யும் தொழிற்சாலை உள்ளது. குழல் விளக்கில் உபயோகப்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சோக் என்கின்ற சாதனத்தை 'ஓபல்' என்ற பெயரில் தயாரிக்கும் எலட்ரோஸ்டிரீக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் இயங்கி வருகிறது. மீன் பிடி வலை செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது. இவ்வூரைச் சார்ந்த பெருமக்கள்: முன்னாள் அமைச்சர் கோவேந்தன், காங்கிரஸ் தியாகிகள் வைரத்தேவர், வைரவன் சேர்வை, குருவிக்கரம்பை வேலு, கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், ஏ.கே. சுப்பையன்.
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி:
இந்த இரண்டு ஊர்களை உள்ளடக்கிய கிராமங்களிலிருந்து தான் தஞ்சைக்கு காய்கறி, வாழை இலை, பூ, தண்டு, காய் முருங்கைக் கீரை, அகத்துக்கீரை, வெற்றிலை முதலியவை சந்தைக்கு மொத்த வியாபாரத்திற்கு செல்கின்றன. காவிரி பாயும் இப்பகுதி மிகுந்த வளமானதால் ஆண்டு முழுவதும் வேளாண்மை தொடர்ந்து நடந்து வருகிறது.
பாபனாசம்:
1910 ஆம் ஆண்டு முதல் தனிவட்டமாக திகழ்கிறது. இவ்வட்டத்தில் 104 பெரிய கிராமங்கள் உள்ளன. ஏடு தேடிய ஏந்தல் உ.வே. சாமிநாதய்யர் பிறந்தது இங்குள்ள உத்தமதான புரத்தில்தான். தமிழிசை வாணர் சிவன் பிறந்தது பாபநாசத்தில்தான். இவ்வூர் கோவிலில் 108 லிங்கங்கள் உள்ளன. பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவடை என்ற மூன்று பெரிய ஊர்களிலும் முஸ்லீம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இம்மூன்று ஊர்களிலும் நல்ல வண்டல்மண் கொண்ட செழிப்பான நெல் விளையும் பகுதிகள் ஆகும். இப்பகுதியிலிருந்து தஞ்சை சந்தைக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வருகிறது, தஞ்சாவூர், தேங்காய், செய்யும், தொழிற்சாலை, இங்கு, தஞ்சை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, பட்டு, எண்ணெய், காணப்படுகிறது, வேலை, தொழில்கள், அதனால், தகவல்கள், பட்டுக்கோட்டை, தமிழ்நாட்டுத், கயிறு, இவ்வூர், thanjavur, உள்ளது, districts, பேராவூரணி, சுற்றி, கொப்பரை, பிறந்தது, ஊர்களிலும், | , பெரிய, ஆண்டு, மொத்த, குருவிக்கரம்பை, சந்தைக்கு, கிராமங்கள், நிறைந்து, மாவட்டத்தில், வருகின்றனர், குடந்தை, முதலிய, நெசவு, ஹெக்டேரிலும், இடங்களில், தொழில், நெல், information, புகையிலை, வாழை, போன்ற, வேளாண்மை, வேளாண்மையை, ஆய்வு, தொழிற்சாலைகள்