கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | நாகர்கோவில் |
பரப்பு : | 1,684.4 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,870,374 (2011) |
எழுத்தறிவு : | 1,548,738 (91.75 %) |
ஆண்கள் : | 926,345 |
பெண்கள் : | 944,029 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 1,111 |
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள்- 4, (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை);
நகரியம்-1 (கன்னியாகுமரி);
ஊராட்சி ஒன்றியம் - 9; பேரூராட்சிகள் - 67; ஊராட்சி-88.
சட்டசபை தொகுதிகள்:
7 (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம்,
திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.
நாடாளுமன்ற தொகுதி
1 (நாகர்கோவில்).
வழிபாட்டிடங்கள்:
கன்னியாகுமரி- பகவதியம்மன்; சுசீந்திரம்-
தாணுமாலையன் கோவில்; நாகர்கோவில்- நாகராஜா கோவில்,
முந்திரிதோப்பு- வைகுண்டசாமி அய்யா, திருவட்டார்- ஆதிகேசவப்
பெருமாள்; கோட்டாறு- சவேரியார் கோவில். தக்கலை- ஞானி
பீர்முகமது மசூதி.
பன்னிரெண்டு சிவாலயங்கள்:
திருமலை, திக்குரிச்சி, திருப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை,
பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு,
திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்ற 12
சிவாலயங்கள் இம்மாவட்டத்தில் உண்டு. சிவராத்திரி அன்று பக்தர்கள்
இச்சிவாலயங்களை நோக்கி உச்சரித்துக் கொண்டே ஓடுவர். அதற்கு
'சிவாலயம் ஓடுவது' என்று பெயர். கடைசியாக தாணுமாலயனை வணங்குவது
வழக்கம்.
மாவட்டத்தில்
குறிப்பிடத்தக்கோர்:
தொல்காப்பியர், அதங்கோட்டாசான்,
திருவள்ளுவர் போன்ற பழங்கால தமிழ் அறிஞர்களும், இக்காலத்தில்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நூறு அவதானங்களை செய்த சதாவதானி
செய்குத்தம்பி பாவலர், டி.கே. எஸ். சகோதரர்கள், தோழர்
ஜஂவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரா பா. நடராசன்,
நாஞ்சில் மனோகரன் போன்றோர் முக்கியமானவர்கள்.
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, நாகர்கோவில், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், கோவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், ஊராட்சி, திருவட்டார், | , குளச்சல், சிவாலயங்கள், மக்கள், districts, information, kanniyakumari, பெயர், பத்மநாபபுரம்