விலங்கியல் :: சூழ்நிலையியல்
1. சூழ்நிலை என்றால் என்ன?
ஒரு தொகுதியைச் சூழ்ந்துள்ள சுற்றச் சார்பு.
2. சூழ்நிலை இயல் என்றால் என்ன?
உயிர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராயும் உயிரியல் துறை.
3. சூழ்நிலையின் இரு பிரிவுகள் யாவை?
1. தனிச்சூழ்நிலை இயல் - தனி உயிர்கள் பற்றியது.
2. தொகுசூழ்நிலை - தொகுதி உயிர்கள் பற்றியது.
4. தகைவு என்றால் என்ன?
உயிரிகள் தம் சூழ்நிலைக்கேற்பச் செயற்படும் நிலை. இது உறுப்பு, நிறம் முதலியவற்றில் இருக்கும். விலங்குகள் தங்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இது பயன்படுகிறது.
5. தகைவின் பல வகைகள் யாவை?
1. பாதுகாப்புநிறம் - வெட்டுக்கிளி
2. தாக்குநிறம் - பச்சைப்பர்பு
3. எச்சரிக்கை நிறம் - விரியன், நல்லபாம்பு.
4. நிறமாற்றம் - பச்சோந்தி.
6. தகைவுப் போலி என்றால் என்ன?
உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்குள்ள விலங்குகள் தீங்கற்ற விலங்குகளை ஒத்திருத்தல். ஒலைப்பாம்பு நிறத்தில் விரியனை ஒத்திருத்தல்; சாரைப்பாம்பு நல்லபாம்பு போல் சீறுதல்.
7. ஆட்சி எல்லை என்றால் என்ன?
உணவு உண்ணல், கூடுகட்டுதல், கலவி நிகழ்த்தல் முதலிய செயல்களுக்காக ஒரு விலங்கு பாதுகாக்கும் இடம்.
8. போட்டி என்பதின் சிறப்பு யாது?
நீர் முதலியவற்றிற்காக இரு உயிரிகளுககிடையே ஏற்படும் இடைவினை. இயற்கைத் தேர்வில் இது ஒர் இன்றியமையாக் காரணி.
9. புறவெப்ப வாழ்வி என்றால் என்ன?
சூழ்நிலையிலிருந்து நேரடியாக வெப்பத்தைப் பெறும் தனிஉயிர். பறவைகள், பாலூட்டிகள் தவிர, ஏனையவை இவ்வாறு வெப்பத்தைப் பெறுபவை.
10. இயலிட உயிரி என்றால் என்ன?
ஓரிடத்திற்கே உரிய உயிரி. புலி நம் நாட்டிற்கே உரியது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலையியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்