பத்ம புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
ஒரு காலத்தில் சுமேரு உச்சியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்துகொண்டு இருந்தார். ரங்க வித்யாதரன் என்ற கந்தர்வன் அருகில் நின்று பாடிக்கொண்டிருந்தான். புலஸ்தியனுடைய தவம் கலையத் தொடங்கியதால், அவர் கந்தர்வனை அழைத்து, பாடல் நன்றாக இருக்கிறது. ஆனாலும் அது என் தவத்திற்கு இடையூறாக இருப்பதால் வேறு எங்காவது சென்று பாடு என்று கூறினார். அந்த கந்தர்வன் "சுமேருமலை அனைவருக்கும் சொந்தம் பாடுவது என் உரிமை. அதைக் கேட்க நீ யார்? உனக்கு இந்த இடம் பிடிக்கவில்லையானால் வேறு எங்காவது சென்று தவம் செய்' என்று கூறிவிட்டான். சில நாட்களில் புலஸ்திய முனிவர் காட்டில் வேறொரு பகுதிக்குச் சென்று தவம் செய்யத் துவங்கினார். அவர் அங்கே சென்றிருப்பதை அறிந்த கந்தர்வன் ஒரு குறும்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் ஒரு பன்றி வடிவெடுத்துக்கொண்டு புலஸ்திய முனிவர் தங்கியிருந்த பர்ணசாலையை அடுத்த பூமியைத் தோண்டத் துவங்கினான். தவம் கலைந்த புலஸ்திய முனிவர் இது சாதாரண காட்டுப் பன்றி அன்று, ரங்க வித்யாதரன் என்ற பழைய கந்தர்வன்தான் என்பதை அறிந்துகொண்டார். கடுஞ்சினம் கொண்ட புலஸ்திய முனிவர் நீ பூமியில் பன்றியாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். சாபத்தைக் கேட்டு நடுங்கிப் போன வித்யாதரன் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். முனிவர், ‘இஷ்வாகு மன்னனுடைய அம்பு உன்னைக் கொல்லும்போது, நீ பழைய கந்தர்வ வடிவம் பெறுவாய்' என்று சாப விமோசன வழியும் தந்தார். "இப்பொழுது உன் கணவனாகிய இஷ்வாகு அம்பு பட்டு என் கணவன் உய்கதி அடைந்து விட்டான்” என்று கூறி முடிக்கவும் 'சுதேவா! உன்னுடைய கதை என்ன? என்று கேட்க, பெண் பன்றி தன் கதையைக் கூறத் துவங்கியது:
ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தா என்ற பிராமணன் வசித்து வந்தான். அவனுக்குச் சுதேவா என்ற பெண் (இஷ்வாகுவின் மனைவி சுதேவா வேறு இவள் வேறு) இருந்தாள். நல்ல கல்வி அறிவு உடையவனாயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை வளர்த்து வந்தான். அவளுக்கு மணப் பருவம் வந்ததும், எத்துணையோ பேர் அவளை மணக்க முன்வந்தும் வகதத்தா தன் மகளை அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்து விட்டான். தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து விட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான். சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான். அகங்கார வடிவினளாகிய சுதேவா கணவனைத் துளசிபோல மதித்து நடத்தி வந்தாள். மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான். வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும் எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பெண் வீட்டில் இருப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இவளை வீட்டைவிட்டு அனுப்பி விடுக! என்று கூறினாள். மனைவி சொல்லில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட வசுதத்தா தன் செல்ல மகளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஊர் ஊராகச் சென்று, பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்த சுதேவா கடைசியாக ஒரு ராஜ்ஜியத்தில் புகுந்து மிகுந்த செல்வம் உடைய ஒருவன் வீட்டில் பிச்சை கேட்டாள். அந்த வீட்டுக்காரன் தன் மனைவியை அழைத்து, "மங்களா! யாரோ பசி என்று கேட்கிறார்கள், வேண்டுமான உணவினைப் படைப்பாயாக!” என்று
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 4 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சுதேவா, பெண், முனிவர், மகளை, தவம், புலஸ்திய, சென்று, வேறு, பன்றி, கணவன், மனைவி, அம்பு, ", அந்த, கந்தர்வன், யார், பெண்பன்றி, வித்யாதரன்