பத்ம புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
எப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய திதி, மறுபடியும் காசிபரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினாள். இந்திரன்மேல் பெருஞ்சினம் கொண்ட காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து, பூமியில் எறிந்தார். விருத்ராசுரன் என்ற பெயருடன் அந்த முடியிலிருந்து ஒரு அசுரன் தோன்றி, "எனக்கு இடும் கட்டளை என்ன?’ என்று காசிபரிடம் கேட்டான். “எப்படியும் இந்திரனை ஒழித்துவிடு” என்று கட்டளையிட்டார். இந்த நோக்கத்துடன் புறப்பட்ட விருத்ராசுரன் போர்க்கலை பயின்று கொண்டிருந்தான். இதை அறிந்த இந்திரன் இவனைப் போர் செய்து அழிக்க முடியாது, தந்திரத்தால் தான் அழிக்க முடியும் என்று நினைத்து சப்த ரிஷிகளையும் அழைத்தான். “நீங்கள் எனக்காக விருத்ராசுரனிடம் செல்லுங்கள். தேவாசுரப் பகையை இனி வளர்க்க வேண்டாம் என் ஆட்சியில் பாதியை அவனுக்குக் கொடுக்கிறேன். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்யலாம் என்று சொல்லி அவனை அழைத்து வாருங்கள்” என்று வேண்டிக் கொண்டான். முனிவர்கள் விருத்ராசுரனிடம் சென்று இதைச் சொல்ல, விருத்ராசுரன் அதை ஏற்றுக் கொண்டான். உடன்படிக்கைப்படியே இந்திரன் ஆட்சியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை விருத்ராசுரனிடம் கொடுத்துவிட்டான். இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க சற்றும் விரும்பாத இந்திரன், காலம் பார்த்து விருத்ராசுரனை அழிக்க நினைத்தான். இதனிடையில் நந்தன கானகம் என்ற இடத்தில் உலாவிக் கொண்டிருந்த விருத்ராசுரன் எதிரே ரம்பை என்ற தேவ கன்னிகை தோன்றினாள். அவள்மேல் ஆசைப்பட்ட விருத்ரன் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று ஒரு கட்டளை விதித்தாள் ரம்பா. விருத்ராசுரன் அதற்கு உடன்படவே ரம்பா மணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து ரம்பா விருத்ராசுரனைப் பார்த்து "இந்த அருமையான திராட்சை ரசத்தை அருந்துங்கள்” என்று கூறினாள். விருத்ரா சுரன், காசிபன் என்ற பிராமணன் மகன் நான். மது அருந்துவது பாவம்' என்று கூறினான். தனக்காக மதுவை அருந்தியே தீர வேண்டும் என்று ரம்பா பிடிவாதம் செய்ததால், விருத்ராசுரன் மதுவை அருந்தி மயக்கத்தில் வீழ்ந்து விட்டான். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், விருத்ரனைக் கொலை செய்து விட்டான். ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது.
(இதனை அடுத்துப் பத்ம புராணத்தில் வெனாவின் கதையும் பிருதுவின் கதையும் வருகின்றன. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளன.)
ஆண், பெண் பன்றிகளின் கதை
இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்டபோது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள். பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு இறுதியாக ஒர் ஆண் பன்றி, அதன் மனைவியாகிய பெண் பன்றி, அவற்றின் குட்டிகளாகிய ஆண் பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்ற இடத்திற்கு வந்தனர். இஷ்வாகுவின் வீரர் பலர் அப்பன்றிகளை எதிர்க்க பலரைத் தம் கொம்புகளால் குத்திக் கிழித்து விட்டது. வியப்படைந்த இஷ்வாகு மன்னன் தானே அந்த ஆண் பன்றியை அம்பை எய்து
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 3 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், விருத்ராசுரன், வேண்டும், ரம்பா, அவன், அறிந்த, செய்து, விருத்ராசுரனிடம், பெண், அழிக்க, திதி, காசிபரிடம்