மச்ச புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
கட்டட சிற்பக்கலைகள்
கட்டடக் கலைக்கு மூலமாக உள்ளவர்கள் பிருகு வசிட்டர், விஸ்வகர்மா, நாரதர் முதலிய பதினெட்டு தேவர்களும், முனிவர்களும் ஆவர். சைத்ர (சித்திரை) மாதத்தில் வீடு கட்டும் பணி தொடங்கக் கூடாது. வைகாசியில் துவங்குவது நற்பலனைத் தரும். மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் (தமிழ் மாதம் சித்திரை 1ஆம் தேதி, அகில இந்திய கணக்குப்படி சைத்ர மாதம் 24ஆம் தேதி ஆகும். இதனைக் கொண்டு மற்றவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்) அஸ்வினி, ரோகிணி, மூலம் ஆகிய நட்சத்திரங்கள், வீடு கட்டத் துவங்குவதற்கு உகந்தவை. ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகள் தவிர மற்ற நாட்கள் சிறப்பானவை.
வீடு கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனை சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். ஒரு குழியை வெட்டி அதில் செடியை நட வேண்டும். அச்செடி வளர்ந்து மரமாக நின்றால் அது நல்ல இடம். செடி கருகிப் போனால் வேறு இடம் தேட வேண்டும். மனையில் ஒரு சதுரமான படம் வரைய வேண்டும். அதற்குள் ஒரே அளவிலான எண்பத்தோரு சதுரங்கள் வரையப்பட வேண்டும். ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு குறிப்பிட்ட தேவனை வணங்க வேண்டும்.
ஒரு வீட்டிற்கு நான்குபுறமும் கதவுகள் இருக்குமானால் அவ்வீடு சர்வ தபோ பாத்ர என்று வழங்கப்படும். ஒரு சாதாரண மக்கள் குடியிருக்கும் வீடு ஒரு முழம் நீளம் இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் மரங்கள் இருக்கக் கூடாது.
வீடு கட்டும்பொழுது மரவேலைக்காகத் தேர்ந்தெடுக்கப் படும் மரங்களை கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். பறவைகள் வீடு கட்டியிருக்கும் மரங்களை வெட்டக் கூடாது. சில குறிப்பிட்ட மரங்களைப் பயன் படுத்தக் கூடாது. இடி விழுந்த மரங்களைப் பயன்படுத்தக் கூடாது. சுடுகாட்டில் உள்ள மரங்கள், கோயிலைச் சுற்றி உள்ள மரங்கள், இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. வேப்பமரம், மாமரம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
சிவனுடைய விக்கிரகம் செய்யும் பொழுது, சிவனது சந்திரன் அமைக்கப்பட வேண்டும். சிவனுக்கு வயது பதினாறு என்பது போல் தோற்றமளிக்க வேண்டும். புலித்தோல் ஆடையாகவும், பாம்புகளை மாலையாகவும் அணிந்திருக்க வேண்டும். மயிலிறகு ஒரு காதினை அழகுபடுத்த வேண்டும். திரிசூலம், தண்டம், வேல் முதலியவை வலப்புறத்திலேயே இருக்க வேண்டும். கபாலம், பாம்பு, வாள் முதலியவை இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும். எருதின் மீது அமர்ந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 16 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், கூடாது, வீடு, உள்ள, மரங்கள், விஷ்ணு, அமுதம்