மச்ச புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
16. மச்ச புராணம்: விஷ்ணு மீன் அவதாரம் எடுத்த பொழுது கூறப்பட்டது. பதினாலாயிரம் பாடல்களைக் கொண்டது.
17. கருட புராணம்: கிருஷ்ணனால் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.
18. பிரம்மாண்ட புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பன்னிரண்டாயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்டது.
வஜ்ராங்காவின் கதை
இந்திரனைக் கொல்ல வேண்டும் என்று திதி என்ற காசியப முனிவரின் மனைவி விரதம் மேற்கொண்டாள். விரதத்தில் ஏற்பட்ட பிழையால் மருத்துக்கள் என்ற பெயருடன் பிறந்த பிள்ளைகள் அனைவரும் அவள் எண்ணத்திற்கு மாறாக இந்திரனின் நண்பர்களாக ஆகிவிட்டனர். இதனால் மனம் குமுறிய திதி மறுபடியும் விரதம் மேற்கொண்டாள்.
அவளுடைய கணவர் காசியபன் "பதினாயிரம் ஆண்டுகள் நீ தவம் செய்தால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்திரனின் வஜ்ராயுதம் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. வஜ்ராங்கா என்ற பெயரை அவன் பெறுவான்” என்று கூறினார்.
பதினாயிரம் ஆண்டுகள் கழித்து வஜ்ராங்கன் பிறந்தான். அவன் வளர்ந்து காளைப் பருவம் அடைந்தவுடன் அவன் தாய் அவனிடம் பின்வருமாறு கூறினாள். "மகனே, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை நான் பெற்றும் அவ்வனைவரையும் இந்திரன் கொன்றுவிட்டான். எப்படியாவது அவனைப் பழிவாங்க வேண்டும். நீ உடனே போருக்குச் சென்று வா" என்று அனுப்பினாள். இந்திரனுடன் போர் புரிந்து அவனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான். தன் தாயின் எதிரே இந்திரனை நிறுத்தி அவனைக் கொல்வதற்குத் தயாரானான். அப்போது பிரம்மாவும் காசியப முனிவரும் அங்கே வந்தனர். பிரம்மா வஜ்ராங்கனைப் பார்த்து பின்வருமாறு பேசினார். "நீ இவனைக் கொல்ல வேண்டா. இந்திரன் இறந்தால் தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் உண்டாகும். மேலும் உன்னால் கட்டப்பட்டு உன் முன் நிற்பதே இந்திரனுக்குக் கிடைத்த பெரிய அவமானம். இந்திரப்பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி அவமானப்படுவது இறப்பதை விடக் கொடுமையானது. ஆகவே இவனை விட்டு விடு” என்று கூறினான் பிரம்மன். அதைக் கண்ட வஜ்ராங்கா, 'இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. என் தாயின் ஆணைக்குக் கட்டுப்பட்டே இவனை இங்குக் கொண்டு வந்தேன். அனைத்துலகங்களையும் படைக்கும் தலைவரான தாங்களும் என் தந்தையும் கட்டளை இடும்போது எக் காரணத்தைக் கொண்டும் அந்தக் கட்டளையை மீறமாட்டேன். ஆகவே இவனை அவிழ்த்து விடுகிறேன்' என்று கூறி இந்திரனை விடுதலை செய்துவிட்டான்.
இது நடந்த பிறகு, பிரம்மா வஜ்ராங்கனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொல்ல, நெடுங்காலம் பெருந்தவத்தில் நான் ஈடுபட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான் வஜ்ராங்கன். அந்த வரத்தைக் கொடுத்த பிரம்மன், வாரங்கி என்ற அழகான பெண்ணை உண்டாக்கி வஜ்ராங்கனுக்கு மணம் செய்து வைத்தான்.
சிலகாலம் கழித்து வஜ்ராங்கன் கடுந்தவம் ஒன்றை மேற்கொண்டான். ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு செய்த பிறகு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தலைகீழாக நின்று தவம் செய்தான். அதனை அடுத்து நீரினுள் சென்று இதே போன்று தவத்தை மேற்கொண்டான்.
கணவன் வரும்வரை காத்திருக்க வேண்டிய வாரங்கி தன் ஆசிரமம் சென்று தன் தவத்தை மேற்கொண்டாள். இந்திரன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவில்லை. ஆனால்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 12 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், ஆண்டுகள், கொண்டது, கூறப்பட்டது, பாடல்களைக், இந்திரன், சென்று, இவனை, வஜ்ராங்கன், மேற்கொண்டாள், புராணம், கொல்ல, ", அவன்