கூர்ம புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
இவ்வாறு கூறியபின் பிறப்பு, இறப்பு கடந்ததும், தோற்றம், முடிவு இல்லாததும், பொறிபுலன் காண வெளிப்பட்டு நில்லாததும் ஆகிய ஒரு நிலையில் சங்கரன் கலந்துவிட்டார்.
ருத்ரன்
பிரம்மன் தன் ஆசனமாகிய தாமரை மலரில் சென்று அமர்ந்து கொண்டார். திடீரென்று மது, கைடபன் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். பிரம்மன் சிருஷ்டிக்கும் அனைத்தையும் அழித்து விடுவதாக பயமுறுத்தினர். உடனே, பிரம்மன் விஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு தன் உடலில் இருந்து இருவரைத் தோற்றுவித்து, மது கைடபர்களைக் கொல்லச் செய்தார். இவ்விரு அரக்கர்களும் இறந்தபின்பு, பிரம்மன் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடர்ந்தார். சிவன் தன்னுடைய மகனாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் சோர்வும் அடைந்து அழத் துவங்கினார். அக்கண்ணிர்த் துளிகளினின்று பூத, பிரேதா என்ற இரு பேய்கள் தோன்றினர். பிரம்மன் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பிரம்மனின் வாயிலிருந்து சிவன் தோன்றினார்.
குழந்தை வடிவிலிருந்து சிவன், பிறந்த உடன் அழத் துவங்கினார். பிறந்தவுடன் அழத்துவங்கியதால் அக்குழந்தைக்கு 'ருத்ரன்' என பிரம்மன் பெயரிட்டார். ருத்ரன் என்ற பெயருடன் பாவ, சர்வ, ஈசான, பசுபதி, மகாதேவா என்ற பெயர்களையும் சூட்டினார்.
பார்வதியின் ஆயிரம் நாமங்கள்
சிவன் தட்சன் மகளாகிய சதியை மணந்தார். சதி இறந்து, இமவான் மகள் பார்வதியாக அவதரித்தார். இமவானும், மேனகாவும் அம்பிகையே தங்களுக்கும் மகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினர். அம்பிகை அவர்கள் எதிரே தோன்றித் தன் தெய்வீக வடிவைக் காட்டி, தானே அவர்கள் மகளாகப் பிறப்பதாகக் கூறினார். அவர் பெயர்களுள் சில தந்துள்ளோம், உமா, நிஷ்கலா, அமலா, மஹேஸ்வரி, நித்யா, தேவத்மா, வியாபினி, ஜகன்மாதா, ஈஸ்வரப்ரியா முதலியவையாம்.
உத்தானபாதா வம்சாவளி
சுயவம்பு மனு, புத்தரூபா ஆகிய இருவரின் மகன்களே உத்தானபாதா, பிரியவ்ரதா ஆகியோர். இவர்களில் துருவன் உத்தானபாதாவின் மகனாவார். மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாகிய துருவனுக்கு, சொர்க்கத்தில் துருவலோகம் என்றொரு இடத்தை விஷ்ணு கொடுத்து விட்டார். உத்தானபாதாவின் வழியில் வந்தனாகிய சருக்ஷா, ஆறாவது மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். இவனது பரம்பரையில் தோன்றியவர்களே எவனா, அவன் மகன் பிருத்து ஆகியோர். பிருத்துவின் மகன் சிகண்டி சிகண்டியின் மகன் சுசிலா. சுசிலா வேதங்களை நன்கு படித்து, புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்றான். இறுதியாக இமயமலைக்கு வந்து சேர்ந்தான். மந்தாகினி நதிக்கரையில் அழகிய ஆசிரமம் அமைத்து, சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வாறு சுசிலா தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, சுவேதாஸ்வதா என்ற முனிவர் அங்கு வந்தார். அந்த முனிவர் உடம்பில் சாம்பலைப் பூசிக் கொண்டு, மிக மெலிந்த உருவமாகக் காட்சி அளித்தார். தன்னுடைய தவத்தை முடித்துக் கொண்டு சுசிலா, கண்விழித்து முனிவரைப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 6 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், சுசிலா, சிவன், மகன், விஷ்ணு, ருத்ரன், ஆகிய