கூர்ம புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
பிரபஞ்ச உற்பத்தி
அடுத்தபடியாக விஷ்ணு, பிரபஞ்சத் தோற்றம் பற்றிக் கூறத் துவங்கினார். துவக்கத்தில் பரப்பிரம்மம் மட்டுமே இருந்தது. எங்கும் நிறைந்ததும், ரூப, அரூபமானதும், ஆதியும் அந்தமும் இல்லாததும், சொற்களால் விவரிக்க முடியாததும் ஐம்புலன்களால் உணர முடியாததும் ஆகியது பரப்பிரம்மம்.
இப்பரப்பிரம்மத்தினின்று தோன்றியவர்களே படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும், அழிக்கும் தொழிலைச் செய்யும் சிவனும் ஆவர். பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் ஒரு பொன்னாலாகிய முட்டை தோன்றியது. அம்முட்டை மிகப் பெரியதாகி அதில் படைக்கும் கடவுளாகிய பிரம்மன் தோன்றினார். அவருடன் உலகத்தில் உள்ள சர அசரப் பொருட்கள் யாவும் தொடக்க நிலையில் இருந்தன. தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் முதலானவை அவற்றுள் இருந்தன. பொன்னாலாகிய முட்டையினின்று தோன்றியவர் பிரம்மன் என்பதால் அவருக்கு ஹிரண்யகர்ப்பன்' என்ற பெயர் உண்டாயிற்று. பிரம்மனே முதன் முதலில் தோன்றியவர். அவருக்கு நான்கு முகங்கள் உண்டு. அவர் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டார் என்பதால் சுவயம்பு என்ற பெயரும் ஏற்பட்டது.
(இதை அடுத்து, கூர்ம புராணம் தேவர்கள் காலம், யுகங்கள் பற்றிப் பேசுகிறது. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது)
வராக அவதாரம்
பத்ம கல்பத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு உலகம் நீரில் மூழ்கி இருந்தது. விஷ்ணு நீரின் மேல் உறங்கிக் கொண்டிருந்தார். ஆயிரம் மகாயுகங்கள் விஷ்ணு உறங்கினார். புதிதாகப் பிரபஞ்சத்தைப் படைக்க எண்ணினார் பிரம்மன். ஆனால் பூமி நீரில் மூழ்கி இருந்ததால், படைப்புத் தொழிலைச் செய்ய முடியாத பிரம்மன், விஷ்ணுவிடம் சென்று உதவி வேண்டினார்.
விஷ்ணுவும் வராக அவதாரம் எடுத்து, பாதாளலோகம் சென்று பூமியைத் தேடினார். கடைசியாக பூமியைக் கண்டு பிடித்துத் தன் கொம்புகளுக்கிடையே வைத்து நீருக்கு மேலே தூக்கி வந்தார். நீரின் மேல் பூமியை வைத்தவுடன் மிகப் பெரிய படகினைப் போல் பூமி நீரில் மிதக்கலாயிற்று.
பிரபஞ்ச தோற்றம் தொடர்ச்சி
பிரம்மன் முதலில் மானசீக புத்திரர்களாக ஐந்து மகன்களைப் படைத்தார். அவர்கள் சனகர், சனாதனர், சனந்தன, கிரது, சனத்குமாரர் ஆகியோர் ஆவர். இவர்கள் ஐவரும் முனிவர்களாகி விட்டமையின், மனித உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. ஆதலால் இன்னும் சில உயிர்களை பிரம்மன் படைத்தார். அதற்கு முன்பாகத் தவத்தில் ஈடுபட்டார் பிரம்மன். அவர் தவம் எப்பலனும் அளிக்கவில்லை. ஆகையால் கோபமும் சோர்வும் அடைந்து கண்ணிர் சிந்தினார். அக்கண்ணிரிலிருந்து சிவன் தோன்றினார். அவரை வணங்கிய பிரம்மன், சிவனிடம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 3 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், ஆகும், செய்யும், தொழிலைச், நீரில், விஷ்ணு, பிரபஞ்ச