கூர்ம புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
பிரம்ம தேவனின் கபாலம் கால பைரவனின் கையில் ஒட்டிக் கொண்டு விழ மறுத்து விட்டது. அந்தக் கபாலத்துடன் விஷ்ணுவிடம் பிச்சை ஏற்பதற்காகச் சென்றார். விஷ்ணு தன்னைத் தீயிலிருந்து இரத்தம் கபாலத்தில் விழுமாறு செய்தும் கபாலம் விழவில்லை. பிராமணனாகிய பிரம்மனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோஷம் குரூரமான பெண் வடிவுடன் காலபைரவரைப் பின்தொடர்ந்தது. எங்கு சென்றும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இறுதியாகக் காலபைரவர் வாரணாசிக்குள் நுழைந்தார். அந்த எல்லையிலேயே பிரம்மஹத்தி அவரை விட்டுப் பிரிந்து விட்டது. நகருக்குள் சென்றதும் கையில் இருந்த கபாலமும், காலபைரவர் கையை விட்டுக் கீழே விழுந்து விட்டது. பிரம்ம கபாலம் கையை விட்டு நீங்கிய இடம் ஆதலால், வாரணாசிக்குக் கபாலமோசன தீர்த்தம் என்ற பெயர் வந்தது.
சீதையின் அக்னிப் பிரவேசக் கதை
(பிரசித்தி பெற்ற வால்மீகி இராமாயணத்தின் மிக முக்கியமான பகுதி சீதையை இராவணன் களவாடிச் சென்றதாகும். வால்மீகிப்படி, இராமனின் மனைவியும், ஜனகன் புத்ரியும், தசரதனின் மருமகளும் ஆகிய சீதையைத் தான் இராவணன் களவாடிச் சென்றான். ஆனால் இந்த முக்கியமான கட்டத்தில் கூர்மபுராணம் சிவ மாற்றங்களைச் செய்து ஒரு புதிய திருப்பத்தைத் தருகிறது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த துளசிதாசர், வால்மீகி உள்பட எல்லாருடைய இராமாயணங்களும் ஒரே மாதிரியாகச் சொல்வி சீதை சிறையெடுக்கப்பட்ட கதையினை மாற்றி, களவெடுக்கப்பட்ட சீதை உண்மையான சீதை அல்லள்; சாயா சீதை என்று முதன் முதலில் பாடுகிறவர் துளசிதாசரே ஆவார். இந்த மாற்றத்தைத் துளசிதாசர்தாமே செய்யவில்லை அதிகம் பயிலப்படாத கூர்மபுராணத்தில் இருந்துதான் இக் கதையை எடுத்துக் கொண்டார் என்பதை நன்கறிய முடியும்,)
கூர்ம புராணப்படி சீதை களவாடப்பட்ட கதை வருமாறு :
இராவணனுடைய தீய எண்ணங்களை, தெய்வ சக்தியால் முன்னரே அறிந்திருந்த ஜானகி, காட்டில் அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டு அக்னி தேவனை வழிபடும் எட்டுப் பாடல்களுடன் கூடிய வாகினி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாள். இதன் முடிவில் மகேஸ்வரன் ஜோதி வடிவுடன் அங்கே தோன்றி சீதையைப் போலவே ஒரு மாய சீதையை உற்பத்தி செய்து, அங்கே இருக்கச் செய்துவிட்டு, உண்மைச் சீதையை அக்னி சொரூபமான தன்னுள் மறைத்துக் கொண்டார். இராவணன் சந்நியாசியாக வடிவம் கொண்டு சீதையிடம் வருவதற்கு முன்பே இது நடைபெற்று விட்டது. காலன் என்ற பெயருடைய யமனால் தூண்டப்பட்ட இராவணன் சீதையைக் கவர வருகின்றான். (அக்னி புராணக் கதையின்படி இராவணன் தங்கையாகிய சூர்ப்பநகை என்ற உத்திரமே இல்லை மற்ற இராமாயணங்களின்படி சூர்ப்பநகை தான் இராவணன் மனத்தில் சீதை பற்றிய எண்ணங்களை உருவாக்கினாள். ஆனால் கூர்ம புராணப்படி இராவணனைத் துண்டியவன் காவன் என்று அழைக்கப்படும் யமனே ஆவான்,) இராவணன் எடுத்துச் சென்றது சாயா சீதை என்பதை இராவணனோ, இராமனோ, இலக்குவனோ எவரும் அறியமாட்டார்கள்.
இராவண வதம் முடிந்த பிறகு, மாயா சீதை (சாயா சீதை) இராமன் முன் அழைத்து வரப்படுகிறாள். அவளைக் கண்டவுடன் என்ன காரணத்தாலோ, ராமன் மனத்தில் இவள்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 14 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சீதை, இராவணன், விட்டது, கையில், சாயா, அக்னி, சீதையை, கபாலம், கொண்டு