பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
கிருஷ்ணனின் நாக்கிலிருந்து தோன்றியவர் சாவித்திரி. சாவித்திரி மந்திரம் மிகப் புண்ணியமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். கிருஷ்ணனின் உணர்வு நிலையில் இருந்து மன்மதனும், மன்மதனின் இடப்பக்கமிருந்து ரதியும் தோன்றினர். பிறகு பஞ்ச பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எங்கும் ஒரே நீர்ப்பரப்பு. அண்டம் என்ற பெயருடைய முட்டை கிருஷ்ணனிடம் இருந்து தோன்றியது. அந்த முட்டை யிலிருந்து ஒரு மாபெரும் வடிவம் தோன்றியது. இந்த வடிவமே விஷ்ணுவாகும். இவ்வடிவம் நீரில் மிதந்து கொண்டிருந்த பொழுது விஷ்ணுவின் இரண்டு காதுகளில் இருந்து மது, கைடவர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். இந்த இரண்டு அசுரர்களும் தாம் தோன்றிய உடனேயே பிரம்மனைக் கொல்ல முனைந்தனர். ஆனால் நாராயணன் அவர்களைத் தன் தொடைகளின் இடையே வைத்து நசுக்கிக் கொன்றார். அந்த இருவரின் சடலத்தின் கொழுப்பிலிருந்து உலகம் உண்டாயிற்று. மேதா என்று சொல்லப்படும் கொழுப்பிலிருந்து உலகம் உண்டானதால், அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மற்ற புராணங்களில் உலகத் தோற்றம் பற்றிக் கூறியதற்கும், இப் புராணத்தில் கூறப்பட்டதற்கும் திறை வேறுபாடுகள் உள்ளன, )
(இதற்கு அடுத்தபடியாக பிரம்ம வைவர்த்த புராணம் காலம் பற்றிப் பேசுகிறது. இதனை முன்பே பிரம்ம புராணத்தில் கூறியிருக்கிறோம்),
கோலோகாவில், ரசமண்டலத்தில் கிருஷ்ணன் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது அவரது இடப்பாகத்தில் இருந்து, முழு அலங்காரங்களுடன் கூடிய, பதினாறு வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி தோன்றினாள். ரசமண்டலத்தில் தோன்றியதால் இவள் பெயர் ராதை என்றாயிற்று. (பதினெட்டுப் புராணங்களில் இந்தப் புராணம் ராதையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அடுத்தபடியாக பத்ம புராணம் போகிற போக்கில் ராதையின் பெயரைச் சொல்விச் செல்கிறது. இவை இரண்டு புராணங்கள் தவிர, வேறு எந்தப் புராணத் திலும் ராதையின் பெயரோ, அவளைப் பற்றிய குறிப்புகளே7 எதுவுமில்லை, டாகவதத்தில் கூட- கிருஷ்ணன் வரலாறு விரிவாகக் கூறப்பட்ட இடங்களில் கூட ராதையின் பெயரே இல்லை என்பது அறியத்தக்கது,) ராதையின் ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் அழகு வாய்ந்த கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடம்பு மயிர்க்காலில் இருந்து முப்பது கோடி கோபிகைகள் தோன்றினர். இவர்களை அல்லாமல், பசுக்கள், எருதுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னப்பறவைகள் முதலியவை கிருஷ்ணனின் உடலிலிருந்து தோன்றின.
கிருஷ்ணன் தன் உடலில் இருந்து வந்த எருதை சிவனுக்கும், அன்னத்தை பிரம்மாவிற்கும், வெண்குதிரையை தர்ம தேவதைக்கும், சிங்கத்தை துர்க்கைக்கும் கொடுத்தார். ஐந்து அற்புதமான ரதங்கள் அவர் உடலினின்று தோன்றின. அவற்றில் ஒன்றை ராதைக்கும் ஒன்றை நாராயணனுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றைத் தானே இருத்திக்கொண்டார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டு, தானே மனோரமா என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் உடம்பில் இருந்து, குபேரன் பணியாளர்கள், சிவன் பணியாளர்கள், நாராயணன் பணியாளர்கள் வெளிப்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 3 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இருந்து, கிருஷ்ணனின், கிருஷ்ணன், ராதையின், தோன்றினர், தோன்றினாள், பணியாளர்கள், பெயர், புராணம், இரண்டு, கையில்