பிரம்ம புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
சுயம்பு மனுவின் மகனான உத்தானபாதனுக்கு மகனாவான் துருவன். துருவன் பரம்பரையில் வந்தவன் அங்கா. நேர்மை உடையவனான அங்கா நல்லமுறையில் ஆட்சி செய்தாலும், அவன் மனைவியாகிய சுனிதா தீயவனான மிருத்யுவின் மகளாவாள். அவள் மகனான வெனா” தகப்பனைப் போலில்லாமல் மிகவும் தீயவனாக இருந்தான். மேலும் தாய்வழிப் பாட்டனாகிய மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக இந்த அண்டங்களுக்கு எல்லாம் தானே தலைவன் என்று சொல்லித் திரிந்தான். இவனைத் திருத்துவதற்காக மாரீச்சியின் தலைமையில் பல முனிவர்கள் ஒன்று சேர்ந்து வந்து எவ்வளவு எடுத்துச் சொல்லியும், வெனா அவர்கள் அறிவுரை களைக் கேட்கத் தயாராக இல்லை. எல்லையற்ற சினம் கொண்ட முனிவர்களில் அத்ரி என்ற முனிவர் வெனாவின் வலக்காலைப் பிடித்து முறுக்கி மாவு பிசைவது போல் பிசைந்தார். மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும், கரியதும் ஆன குள்ளன் ஒருவன் இக்காலின் வழி வெளிப்பட்டான். இந்த உருவத்தைக் கண்டு கலக்கமுற்ற அத்ரி முனிவர் உட்கார் என்ற பொருளுடைய நிஷிதர் என்று கூறினார். எனவே இந்தக் குள்ளனின் பரம்பரை நிஷிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். காலை முறுக்கிய பிறகு இந்த முனிவர்கள் வெனாவின் கையை முறுக்கிப் பிசைந்தார்கள். வெனாவினிடத்தில் இருந்த தீமைகள் முழுவதும் கால் வழியாகச் சென்றுவிட்டமையின், அவனிடமிருந்த நன்மைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிசையப்பட்ட கையின் வழியே ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு 'பிருத்து' என்ற ஒருவன் வெளிப்பட்டான். இவன் வெளிப்பட்டவுடன் வெனா இறந்து விட்டான்.
ஒளியுடன் வெளிவந்த பிருத்துவை இப்பூமிக்கு அரசனாக்கி, பிரம்மாவே முடி சூட்டினார். பூமியிலுள்ள பொருள்களுக்கெல்லாம் யார் யார் தலைவன் என்றும், அதே நேரத்தில் அத்தலைமைப் பதவிகளையும் பிரம்மாவே பங்கிட்டுத் தந்தார். அப்பங்கீட்டின்படி மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள், யாகங்கள், தியானம், வேதியர்கள் ஆகியவர்களுக்குத் தலைவனாகச் சோமனை (சந்திரன்) நியமித்தார். வருணன் கடலுக்கும், குபேரன் செல்வத்திற்கும் அரக்கர்களுக்கும் தலைவனாக்கப்பட்டான். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் தலைவனாக விஷ்ணுவும், அஷ்ட வசுக்களுக்குத் தலைவனாக அக்னியும் நியமிக்கப்பட்டார்கள். எல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவனாக தட்சனும், 49 மருத்துக் களுக்கும் தலைவனாக இந்திரனும், தைத்திரியர்கள், தானவர்கள் என்பவர்களின் தலைவனாகப் பிரஹலாதனும் நியமிக்கப்பட்டனர். பிதுர்க்களுக்குத் தலைவனாக யமனும், யட்சர்கள், ராட்சதர்கள், பிசாசுகள் ஆகியவர்களின் தலைவனாக சிவனும், மலைகளின் தலைவனாக இமவானும் நியமிக்கப்பட்டனர். நதிகளுக்குக்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 4 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தலைவனாக, இந்திரன், கொண்ட, சேர்ந்து