பிரம்ம புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
உரோமஹர்ஷனரைப் பார்த்தவுடன் இந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலரும் அவரைச் சூழ்ந்துகொண்டு, வேதவியாசரிடம் கற்ற புராணங்களைப் பற்றித் தங்களுக்குச் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். இந்த வேள்வி 12 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றமையால், உரோம ஹர்ஷனர் விரிவான முறையில் ஒவ்வொரு புராணம் பற்றியும் முனிவர்களுக்கு சொல்லத் தொடங்கினார்.
அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கிய உரோம ஹர்ஷனர் மிகப் பழைய காலத்தில் தட்சன் முதலிய முனிவர்கள் நான்முகனைப் (பிரம்மன்) பார்த்து பூமியின் தோற்றம் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். நான்முகன் அளித்த விடையை அப்படியே வாங்கிக் கொண்ட என் குருவான வேதவியாசர் அவற்றை எனக்கு வழங்கினார். நான் கேட்டவற்றை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
தொடக்கத்தில் எங்கும் நீரே நிறைந்திருந்தது. பரப் பிரம்மத்தின் ஒரு வடிவாகிய விஷ்ணு அக்கடலின் மேல் படுத்திருந்தார். தண்ணிருக்கு (வடமொழியில்) 'நார' என்றொரு பெயருண்டு. ‘அயன்’ என்ற சொல்லுக்கு படுக்கை என்பது பொருளாகும். எனவே நீரின் மேல் உறங்கிய பரப்பிரம்ம சொரூபம் நார + அயன = நாராயண என்ற பெயரைப் பெற்றது. இத்தண்ணீரிலிருந்து பொன்னாலான பெரிய முட்டை நீரின் வெளியே வந்தது. அதனுள் பிரம்மன் (நான்முகன்) இருந்தான். ஒராண்டுக் காலம் முட்டையினுள்ளே தங்கியிருந்த பிரம்மன் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்ட சுயம்பு மூர்த்தி ஆவான். ஒராண்டு முடிந்ததும் இந்த முட்டையை இரண்டாகப் பிளந்து கொண்டு பிரம்மன் வெளியே வந்தான். முட்டையின் ஒரு பகுதி பரந்த ஆகாயமாகவும், மற்றொரு பகுதி இவ்விரிந்த பூமியாகவும் இருந்த பிரசேதன சகோதரர்கள் கவனத்திற்கு வந்தது. இயற்கையின் இந்தச் சூழலை மாற்ற அவர்கள் தங்கள் வாயின் மூலம் நெருப்பையும், காற்றையும் உண்டாக்கினர். வனங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
உலகின் அழிவைக் கண்டு கலங்கிய சோமன் (சந்திரன்), ஒர் அழகிய பெண்ணுடன் பிரசேத சகோதரர்களிடம் வந்து, "நீங்கள் சினம் கொள்வதில் நியாயமில்லை. உலகை ஆள வேண்டிய நீங்கள் அத்தொழிலைத் துறந்து விட்டதால் இந்நிலை உருவாயிற்று. இப்பொழுது உலகை ஆள்வதற்கு மிக அவசரமாக ஒரு மன்னன் தேவை. இந்தப் பெண்ணை மணந்துகொண்டு அவள் மூலம் பிறக்கும் ஆண் மகவை அரசனாக்கிவிட்டால் உலகமும் செழித்து வளரும்; நீங்களும் இடையூறு இல்லாமல் தவத்தை மேற்கொள்ளலாம்” என்று கூறினான். பிரசேதர்கள் இதற்கு உடன்பட்டு அவளை மணந்து தட்சன் என்ற பிள்ளையைப் பெற்றனர். அவனே உலகத்திற்கு அரசனானான். "மக்களுக்குப் பிரஜை என்ற பெயருண்டு ஆதலால், அவர்களுக்கு பதியாக (அரசனாக) உள்ள தட்சன் 'பிரஜாபதி என்று அழைக்கப்பட்டான்” என்று உரோம ஹர்ஷனர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் குறுக்கிட்டனர். “பெருமுனிவரே, தட்சன் என்பவன் பிரம்மனின் கால் கட்டை விரலில் இருந்து தோன்றினவன் என்றல்லவா நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். அதற்கு எதிராக இப்பொழுது பிரசேதர்களின் மகன்தான் தட்சன் என்றால் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. தயவு கூர்ந்து விளக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
அதைக்கேட்ட உரோமஹர்ஷனர் "இதில் குழம்புவதற்கு எதுவுமே இல்லை. எத்தனையோ தட்சர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒரு தட்சன் நான்முகன் கால் கட்டை விரலில் இருந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 2 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தட்சன், முனிவர்கள், உரோம, பிரம்மன், ", இப்பொழுது, நான்முகன், ஹர்ஷனர்