பவிஷ்ய புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
கிருஷ்ணன், ஜாம்பவதி என்பவளை மணந்து அவள் மூலம் சம்பா என்ற மகனைப் பெற்றான். ஏதோ காரணத் திற்காகக் கிருஷ்ணனே தன் மகனாகிய சம்பாவை, தொழுநோயாளியாக ஆகுக என்று சபித்து விட்டான். இந்த சாபத்தோடு சகதுவீபாவிற்கு வந்தான். சகதுவீபத்தில் இருந்த பிராமணர்கள் சூரிய வழிபாட்டில் வல்லவர்கள். அவன் அரும்பாடுபட்டு சூரியனுக்கு சந்திரபாகு நதிக்கரையில் ஒரு பெருங்கோயிலைக் கட்டினான். ஆதலால் அவர்களை வரவழைத்து தான் கட்டிய சூரியன் கோயிலில் பூசை செய்யுமாறு ஏற்பாடு செய்தான்.
மகப்பிராமணர்கள் தாடி வளர்த்தார்கள். ஏனைய பிராமணர்கள் போல பூணுரலைத் தோளில் இருந்து இடம் வலமாகப் போடாமல், இடுப்பில் கட்டிக் கொண் டார்கள். அந்த பிராமணர்கள் இறந்த உடலைத் தொடவே மாட்டார்கள். அவர்கள் உண்ணும் பொழுது வாய் பேசாமலேயே உண்ணுவர். வாயின் தூய்மை கெடாதபடி வாய்க்கு மேல் ஒரு துணியைக் கட்டி, அசுத்தம் பாடாதபடி, அத்துணியைத் தொங்க விட்டனர் என்று இவர்களைப் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.
இக்கதையின் உட்பகுதியில் இரண்டு மகப்பிராமணர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது வகை மகப் பிராமணர்கள், சூரியனுக்கு பதிலாக அக்னியை வழிபட்டவர்கள் ஆவர். இந்தப் பரம்பரைகளின் தொடக்கம் ரிஜ்வா என்ற முனிவனில் இருந்து துவங்குகிறது. ரிஜ்வா சிறந்த அக்னி பக்தன். எனவே அவன் பரம்பரையில் வந்தவர்கள் வேதம் முதலானவற்றை நன்கு அறிந்திருந்ததோடு வீட்டில் அக்னி வளர்த்து அதனை வணங்கும் பழக்கம் உடையவர்கள். (பவிஷ்ய புராணம் குறிப்பிடும் இந்த 2ஆம் வகை மகப்பிராமணர்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, இரானிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து அக்னி வழிபாட்டை விடாது பின்பற்றி வரும் பார்ஸிக்களை நினைவூட்டுவதாக இருக்கிறது. இவர்களும் பூணூலை இடையில் அணிபவர்கள் ஆவார்கள். வேத வழிபாட்டுக் காரர்களுக்கும் அக்னி முக்கியமான தெய்வம் என்றாலும், அக்னிக்கு மேல் வருணன், இந்திரன் என்ற தெய்வங்களை ரிக் முதலான வேதங்கள் போற்றும். ஆனால் பார்ஸிக்கள், அக்னியையே எல்லாமாக நினைந்து வழிபடுகின்றவர்கள். பவிஷ்ய புராணம் கூறும் இரண்டாவது வகை மகப்பிராமணர்கள் இவர்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படியானால் குப்தர்கள் காலத்தில் இந்து சமயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இப்புராணங்கள் எழுதப்பட்ட பொழுது பார்ஸிக்களையும், இந்துக்கள் என்றே சேர்த்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. காரணம், வேத வழிப்பட்ட வைதிகர்கள், இரான் நாட்டிலிருந்து வந்த மகப்பிராமணர்கள் ஆகிய இருவருக்கும் அக்னி முக்கியமானதாகக் கருதப்பட்டதே காரணம்)
மூன்றாவது தொகுதியினர் சூரிய வழிபாட்டில் முன்னர் குறிப்பிட்ட இரண்டு மகப்பிராமணர்கள் போக மூன்றாவதாக உள்ள தொகுதி போஜகர்கள் எனப்படுவர். போஜகப் பிராமணர்களைப் பற்றி இப்புராணம் விரிவாகப் பேசுகிறது. இவர்களும் சகதுவீபத்தில் இருந்தவர்களே ஆவர். இரண்டாவது மகப்பிராமணர்களைப் பற்றி பவிஷ்ய புராணம் கூறுவதை வைத்துப் பார்த்தால் சகதுவீபம் என்பது இக்காலத்திய இரானிய நாட்டைக் குறிக்கும் என்று கொள்ளலாம். போஜகப் பிராமணர்கள் பூணூலை எப்பொழுதும் அணிந்திருக்க வேண்டும். இவர்கள் இடமிருந்து வலம் அணிந்திருக்கும் பூணூலில் மேல் பகுதியில் சிவனும் நடுப்பகுதியில் பிரம்மனும், அடிப்பகுதியில் விஷ்ணுவும் இருப்பதாகக் கருதினார்கள். இந்தப் பூணூலிலேயே சகல வேதங்களும், சகல ஜீவராசிகளும் அடங்கி உள்ளன என்று கருதப்படுகிறது. எனவே பூணூலை அணியாதவன் தாழ்ந்தவனாகி விடுகிறான். பூணூலை எடுத்து விட்டவன் போஜகப் பிராமணன் என்று கருதப்பட்டான். இவர்கள் ஒவ்வொரு முறையும், உணவைச் சமைத்து உண்பதற்கு முன் சூரியனுக்கு நிவேதனம் செய்துவிட்டுத்தான் உண்பார்கள். மூன்று வேளை குளித்து, ஐந்து வேளை சூரியனை வணங்குவது என்பவை போஜகப் பிராமணர்களுக்கு இன்றியமையாதவைகளாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 3 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அக்னி, பிராமணர்கள், பவிஷ்ய, மகப்பிராமணர்கள், புராணம், பூணூலை, போஜகப், சூரியனுக்கு, இரண்டாவது, சூரிய, வழிபாடு, மகர்கள், பற்றி, இரண்டு, மேல், சூரியனை