பவிஷ்ய புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
பவிஷ்ய புராணம், பிரம்மனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் செய்கிறார் என்றும், அத்ரி முதலிய ஒன்பது முனிவர்களும், சுவயம்பு மனுவும் பிரம்மனிடத்திலே தோன்றினார்கள் என்றும் கூறுகிறது. பிரம்மனின் தோற்றம், பணி ஆகியவற்றைக் கூறும் பொழுது ஏனைய புராணங்களினின்றும் இப்புராணம் மாறுபட்டுள்ளது.
கணேசர் - மாறுபட்ட கதை
தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் செய்து வந்தனர். எந்தக் காரியத்திலும் இடையூறு என்று வந்ததே இல்லை. அப்படியே சில இடையூறுகள் வந்தாலும், அதனை எதிர்கொண்ட மனிதர்கள் வெகு எளிதில் அந்த இடையூறுகளைப் போக்கிப் பயனடைந்தார்கள். நாளாவட்டத்தில் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்க முடிகிறது என்ற எண்ணம் மனிதர்கள் மனத்தில் தோன்றி வலுப்பெறலாயிற்று. இதன் பயனாக ஆணவம், நெஞ்சழுத்தம், யாரையும் மதிக்காத தன்மை, தெய்வங்களிடத்து ஈடுபாடின்மை என்ற துர்க்குணங்கள் மனிதரிடம் படிய ஆரம்பித்தன. மனிதர்களின் இந்தப் போக்கைக் கண்ட பிரம்மன் இவர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும். அதற்குரிய தெய்வத்தை நான் உண்டாக்கப் போகிறேன் என்ற முடிவுடன் கணேசரைப் படைத்தார். அதன் பிறகு சிறியதோ, பெரியதோ யார் எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் கணேசருடைய உதவி நாடவேண்டி வந்து விட்டது. கணேசரை வேண்டிக் கொள்ளாமல் செய்யப்பட்ட காரியங்கள், விக்கினங்கள் என்று சொல்லப்படும் தடைகளால் நின்று போயின. மனிதர்கள் கணேசரிடம் பக்தியும் ஈடுபாடும் கொண்டார்கள். ஒன்றைத் தொடங்குவதற்கு முன் அவரை வேண்டிக் கொண்டு தொடங்கினதால் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்தார்கள். நன்கு அரசாளாத அரசர்கள், நன்கு பாடம் சொல்லாத ஆசிரியர்கள். நன்கு படிக்காத மாணவர்கள் ஆகியவர்களிடத்து கணேசர் கோபம் கொள்கிறார். அவர் கோபித்தால் வாணிபம் நன்கு நடைபெறாது. வேளாண்மை நன்கு செழிக்காது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டுமேயானால், உள்ளன்போடு பூ பிரசாதம் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.
(கனேசருடைய தோற்றம் பற்றிச் சொல்லும் ஏனைய புராணங்கன் கணேசர், சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையாகத் தோன்றியவர் என்றே கூறுகின்றன. பவிஷ்ய புராணம் மட்டும். இவர் பிரம்மன7ல் படைக்கப்பட்டார் என்று பேசுகிறது)
சூரியன் - மாறுபட்ட கதை
தட்சன் மகளாகிய அதிதி காசியப முனிவனை மணந்து தேவர்களைப் பெற்றாள். ஒரு சமயம் அவர்கள் இருவருக்கும் ஒரு முட்டை குழந்தையாகப் பிறந்தது. இந்த முட்டை எவ்வித சலனமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அண்டா என்ற வடமொழிப் பெயருடைய முட்டை செத்துவிட்டது என்று தாய் அதிதி கருதினாள். ஆனால், முட்டையை நன்கு கவனித்த காசியப முனிவர், முட்டை சாகவில்லை என்று கண்டு 'சாகாத முட்டை என்ற பொருளுடைய மித்ருத்தஏரண்டா என்று பெயரிட்டார். ஆறிலிருந்து பிறந்த குழந்தை மிருத்த அண்டாவாக மாறி மார்த்தாண்டன் என்றாயிற்று. இதன் பிறகு உள்ள சம்ஜனா கதை மற்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது) இப்புராணத்தில் (பவிஷ்ய புராணம்) இக்கதையில் சில மாற்றங்கள் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 2 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நன்கு, முட்டை, மனிதர்கள், புராணம், பவிஷ்ய, வேண்டும், சதனிகா, கணேசர்