பாகவத புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
பாண்டவர்கள் சென்ற பிறகு பலம் பொருந்திய பரிட்சித்து உலகை ஆளத் தொடங்கினான். அவனுக்கு ஜனமேஜெயன் முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தனர். தனது பராக்கிரமத் தால் பரிட்சித்து இரண்டு அசுவமேத யாகங்களை நடத்தினான். குரு வம்சத்தின் குருவாக இருந்த கிருபாச்சாரியாரே யாகத்தை முன்னின்று நடத்தினார். திடீரென்று ஒரு நாள் கலிபுருஷன் இவனுடைய நாட்டிற்குள் புகுந்து விட்டதாகக் கேள்விப் பட்டான். போர் புரிவதற்குரிய தளவாடங்களுடன் சென்று, கலியுடன் சண்டை செய்தான். கலி வெவ்வேறு வடிவமெடுத்து ஒட, இறுதியாகப் பரிட்சித்து ஒர் அபூர்வக் காட்சியைக் கண்டான். ஒரு பசுவும், ஒரு எருதும் தம்முள் பேசிக் கொண்டிருந்தன. உலகம் ரொம்பவும் கெட்டுப் போய்விட்டது என்றும், தீமைகள் மிகவும் மலியத் துவங்கி விட்டது என்றும் பேசிக் கொண்டிருந்தன. இப் பசுவும், எருதும் வேறு யாரு மில்லை. பிருத்வி பசுவாகவும், தர்ம தேவதை எருதாகவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஒரு சூத்திரன் இந்தப் பசுவையும், எருதையும் நையப் புடைத்துக் கொண்டிருந்தான். ஒடிச் சென்ற பரிட்சித்து, "அடேய்! நீ யாரென்று நினைக்கிறாய்? நீ செய்யும் அடாத காரியத்தின் விளைவை நீ அறிவாயா? இந்தப் பசுவையும் எருதையும் கொடுமைப்படுத்திய நீ சாகவேண்டியவன்” என்று கூறி, தன்னுடைய வாளை உருவினான். உடனே அந்தச் சூத்திரன் பரிட்சித்து கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கலிபுருஷன் என்ற தன் சுயரூபத்துடன் நின்றான். “அரசே! என்னைக் கொன்றுவிடாதே. உன்னுடைய பரந்த ராஜ்ஜியத்தில் ஒரு சில இடங்களை எனக்கு ஒதுக்கிக் கொடு. நான் அந்த இடத்தை விட்டு வெளிவராமல் இருந்து கொள்கிறேன்” என்று கூறினான்.
மனமிரங்கிய பரிட்சித்து, "தீயவர்கள் வாழும் இடம், கொலை புரிவோர் வாழும் இடம், சூதாடும் இடம், குடிகாரர்கள் வாழும் இடம் ஆகிய இந்த இடங்களை நீ தங்குவதற்குரிய இடமாக வைத்துக் கொள். என் ஆட்சியில் இந்த இடங்களைத் தவிர நீ எங்கும் தலைகாட்டக் கூடாது" என்று ஆணையிட்டான்.
இதன் பிறகு ஒருமுறை வேட்டைக்குச் சென்ற பரிட்சித்து மன்னன், ஒரு மானைத் துரத்திக் கொண்டு மிக நீண்ட தூரம் சென்று விட்டான். பசியும், தாகமும் அவனை வாட்டின. சுற்றுமுற்றும் பார்க்கையில் ஒரு குடிசை தென்பட்டது. அங்கே தண்ணிர் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அக் குடிசைக்குள் நுழைந்தான். குடிசைக்குள் மான்தோலைப் போர்த்துக் கொண்டு, சடை ஏறிப் போன தலையுடன் ஷாமிகா என்ற முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். மன்னன் அதிகாரத் தொனியில் “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’ என்று கேட்டான். பதில் ஒன்றும் வராததால், தன்னை அவமதித்ததாக நினைத்த அரசன் மறுபடியும் உரத்த குரலில் கேட்டான். முனிவனின் தவம் கலையவில்லை. சினம் மிகுந்த பரிட்சித்து கவட்டைக் குச்சியால் பக்கத்தில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டு விட்டுப் போய்விட்டான். அவன் போன சில நேரத்திற்குப் பின் முனிவரின் மகன் குடிசையில் நுழைந்த பொழுது " இக்கோரக் காட்சியைக் கண்டான். மகா சக்தி வாய்ந்தவனும், தவ வலிமை உடையவனுமாகிய அவன், “என் தந்தையை இவ்வாறு செய்தவன் இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சன் என்ற பாம்பால் இறப்பை எய்துவான்’ என்று சாபமிட்டான். கண்விழித்த முனிவர், "மகனே! என்ன காரியம் செய்து விட்டாய்? மிக்க பராக்கிரமசாலியும், நம்மை எல்லாம் காக்கின்ற மன்னனுமாகிய பரிட்சித்துக்கு இவ்வாறு சாபம் கொடுத்து விட்டாயே, அவன் செய்த மிகச் சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனை பொருத்தமில்லாததாகும்." என்று கூறி வருந்தினார்.
இதனிடையில், அரண்மனை சென்ற பரிட்சித்து தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் முனிவர் மகன் இட்ட சாபம் அவன் காதுகளுக்கு எட்டியது. தான் இறப்பதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன என்பதை அறிந்த அரசன். அந்த ஏழு நாட்களையும் கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் மூத்த மகன் ஜனமேஜயனுக்கு அரசைக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 6 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பரிட்சித்து, ", இடம், அவன், சென்ற, முனிவர், மகன், கொண்டு, சென்று, பேசிக், வாழும்