அக்னி புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வருவது வராக அவதாரமாகும். காசிப முனிவனுக்கும், திதிக்கும் மகனாகப் பிறந்தான் ஹிரண்யாக்ஷா, இவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். தவம் செய்து தன்னை யாரும் போரில் வெல்லக் கூடாது' என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். இதனால் தேவர்களுடன் போர் தொடுத்து தேவருலகையும், வருணன், கடல் அரசன் ஆகியோரையும் வென்று நிலவுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் தானே அரசனாக இருந்தான். ஹிரண்யாக்ஷா கடலுக்கடியில் உள்ள வருணனின் அரண்மனையில் இருந்து வந்தான். அதனால் பூமியைக் கடலுக்குக் கீழே கொண்டு சென்று ஆட்சி செய்து வந்தான். இதனால் கோபம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டு, "தாங்கள் தேவருலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பூமியைக் கடலுக்கு மேலே கொண்டு வர வேண்டும்" என்றும் வேண்டினர். இதைக் கேட்ட விஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் சென்றார்.
விஷ்ணு என்பதை அறியாத ஹிரண்யாக்ஷா, வராகத்துடன் போர் செய்தான். பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த போரின் முடிவில் வராகம் தன்னுடைய கொம்பினால் அசுரனைக் கொன்றது. தன்னுடைய கொம்புகளுக்கிடையே பூமியைக் கடலுக்கு மேலே தூக்கி வந்து வைத்தது. .
4. நரசிம்ம அவதாரம்
ஹிரண்யாக்ஷா என்ற அசுரனுக்கு, ஹிரண்யகசிபு என்ற சகோதரன் இருந்தான். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து, விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று சபதம் கொண்டிருந்தான். அதற்காகப் பிரம்மனை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதுகேட்ட ஹிரண்யகசிபு, ‘ஐயனே! யாராலும் வெல்ல முடியாத அரசனாக நான் இருக்க வேண்டும். இரவிலோ, பகலிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. மனிதனாலோ, விலங்கினாலோ எனக்கு இறப்பு ஏற்படக் கூடாது. ஆகாயத்திலோ, நீரிலோ, பூமியிலோ நான் கொல்லப்படக் கூடாது" என்ற வரத்தைக் கொடுக்குமாறு வேண்ட, பிரம்மனும் அப்படியே கொடுத்தார். பிரமனின் வரம் பெற்ற ஹிரண்யகசிபு, தேவர்களை விரட்டி விட்டு, மூன்று உலகங்களையும் தானே ஆண்டு வந்தான்.
ஹிரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அசுரன், தன் மகன் விஷ்ணு பக்தனாக இருப்பதை அறவே வெறுத்தான். எவ்வளவோ சொல்லியும், பிரகலாதனை மாற்ற முடியவில்லை. கோபம் கொண்ட ஹிரண்யகசிபுதன் மகனைக் கொல்வதற்காகப் பல வழிகளில் முயன்றும், ஒவ்வொரு முறையும் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டான் பிரகலாதன். தேவருகிலிருந்து விரட்டப்பட்ட தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணுவும், இதற்கு ஒரு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 3 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், இருந்தான், ஹிரண்யாக்ஷா, விஷ்ணு, தன்னுடைய, ஹிரண்யகசிபு, வந்தான், அவதாரம், கூடாது, வராக, பூமியைக்