கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - கொடுப்பினை
- வசந்த் எதிர்வீட்டில் பதியம்போட்டு ஏழெட்டு நாட்களுக்கும் மேலாயிற்று. இடுப்பளவு உயர்ந்து நிற்கும் நீண்ட கிளையொன்றில் மொக்கொன்று ஒட்டிக்கொண்டு மோனத் தவமிருக்கும். நேற்றோ சரியான வெய்யில். என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்னாசைப் பூஞ்செடிக்கு என ஏங்கி ஏதுமில்லை என்றறிந்ததும்தான் தவிப்பு அடங்கிற்று. இன்றோ காற்றும் மழையும்... வீசும் காற்றின் வேகம் தாங்காமல் கிளையொடியுமோ? கொட்டும் மழையின் கோப விரல்களால் மொட்டவிழ்ந்து மௌனம் சூழுமோ கல்லூரிப் பாடத்தில் கவனம் தவறும். வேகமாய் நடந்து வீடுவந்து பார்த்தால் எதிர்வீட்டுப் பெண்ணுக்கொரு ரோஜாவும் எனக்கொரு புன்னகையும். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - கொடுப்பினை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -