கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - கால்களைக் காணவில்லை
- வசந்த் என் கால்களின் ஆளுமையில் ஒருவித பிரேமை எனக்கு. நான் நடக்க ஆரம்பித்தேன். அப்போது சொன்னாய் உன் கால்கள் வேகத்தின் காதலியென்று. நாள்கள் கொஞ்சம் கழிந்தன. அப்போது சொன்னாய். உன் கால்கள் ஓட்டக்காரனுடையவையென்று. மீண்டும் சில நாள்கள். மறுபடியும் பார்த்தபொழுது குதிரையின் கால்கள் உனக்கென்றாய். நான் என் பாதையில் கவனமாயிருந்தேன். நேற்று சொன்னாய்... காற்று உனது கால்களென்று. இப்போதும் பார்க்கிறாய் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் உனக்கு. களைப்படையாத என் முகத்திலிருந்து மெல்ல மெல்ல என் கால்களை நோக்கி கீழிறங்குகிறது உன் பார்வை. கால்களைக் காணவில்லை. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - கால்களைக் காணவில்லை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - கால்கள், சொன்னாய்