கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம் - பகுதி 2
அனைத்துக் கல்லூரிப் போட்டிகளுக்கான பங்கேற்பிற்காகத் தற்செயலாக அமைந்த அந்தத் தொடர்வண்டிப் பயணத்தில் என் தோள் வாங்கித் தூங்கிய உன் மூடிய விழிகளில் விழித்தேன் முதன் முதலாய் நான் அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த முதன்முதலாக என்னை நீ உனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த போது வழக்கமான அம்மாக்களின் சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு நடுவே.... ''எப்போதும் இவன் உன் மருமகனாக முடியாது ஏனெனில் இவன் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்'' உன் குரல் இப்போதும் கேட்கிறது எனக்குள் தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது. தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது. தொடுதலின் வழியே கசியும் அர்த்தங்களை எந்த மொழி பேசிவிடும் என் காதலியை உனக்கு நான் அறிமுகம் செய்து வைத்தபோது நீ விழுங்கிய எச்சிலில் இருந்தது நமக்கான நட்பு புரிந்து கொள்ளப்படாத நாள்களின் வெறுமையான நாட்குறிப்பில் தாமாகவே வந்து அமர்ந்திருக்கிறது எனக்குப் பிடித்தமான உன் புன்னகை நீ நிரூபித்த பெண்மையிலிருந்து வாய்த்தது நான் மதிக்கும் ஆண்மை பால் வாசனையில் அம்மா அக்குள் வாசனையில் துணைவி இதயத்தின் வாசனையில் நட்பு நேரமாகிவிட்டது எழுந்து போங்கள் என்று சொல்கிற பூங்காக்கள் உள்ளவரை வாழ்க்கை அநாகரிகமானதுதான் கடற்கரையின் முகம் தெரியாத இரவில் பேசிக் கொண்டிருந்த நம்மை நண்பர்களாகவே உணரும் பாக்கியம் எத்தனைக் கண்களுக்கு வாய்த்திருக்கும் பார்வையாளர் நாள். குளித்துக் கொண்டிருந்த நீ வருகிற வரை எனக்குத் துணையாய் இருந்த உன் விடுதி அணிலுக்கு இப்போதும் ஞாபகம் இருக்குமா என்னை |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - பகுதி 2 - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - வாசனையில், நான்