திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும் மன்னா உடம்பின் தொழில். |
91 |
தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும், என்றும் இறந்துரை காமுறுவானும், - இம் மூவர் பிறந்தும் பிறவாதவர். |
92 |
சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும், மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.
இருளாய்க் கழியும் உலகமும், யாதும் தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும் பேதைமை, வாழும் உயிர்க்கு. |
93 |
அறிவில்லாதவர் இடமும், நன்மை, தீமை தெரியாது சொல்கின்ற கோப பேச்சுக்களும், நற்பொருள் அல்லாதவற்றில் விருப்பமும், அறியாமையைத் தருவதாகும்.
நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும், பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல் இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியாதார். |
94 |
நட்புக்குணம் இல்லாதவரிடத்து நண்பராக இருப்பதும், மனைவியை இகழ்ந்து பேசும் அறிவில்லாதவனும், குணமில்லாத சொற்களைச் சொல்பவனும், தம்முடைய ஒழுக்கத்தை உறுதியாக கடைப்பிடிக்காதவர் ஆவார்.
அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர் செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின் வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும் நல் வினை நீக்கும் படை. |
95 |
நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும், நல்லோர் விலகும்படி தோன்றும் விருப்பமும், பகைவரின் கொடிய மொழிகளைப் பொறுக்காத கோபமும், ஆகிய இம்மூன்றும் அறமுறையை நீக்குகின்ற படைக்கருவிகளாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பதினெண், திரிகடுகம், கீழ்க்கணக்கு, மூன்றும், அழுங்கத், நோயும், விருப்பமும், தோன்றும், மூவர், சங்க, வெகுள்வும், விழைவும்