திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு. |
56 |
இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும்.
கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான் நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும் கேள்வியுள் இன்னாதன. |
57 |
தாளத்தோடு சேராத பாட்டும், இரந்து உண்பவனுடைய இரைச்சலும், ஒதுக்குக் குடி இருந்தான் பெரு வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.
பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால் கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத் துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும் மன்னர்க்கு இளையான் தொழில். |
58 |
முன்னோரோடு பழகியவர்களைக் காப்பதும், சுற்றத்தாரைக் காப்பாற்றுவதும், நல்லினத்தாருடன் நட்பு கொள்வதும் இளவரசன் செய்ய வேண்டியவைகளாகும்.
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ் விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க் கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும் உள்ளன போலக் கெடும். |
59 |
சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும்.
பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய் விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும் துக்கப் பிறப்பாய்விடும். |
60 |
பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, மூன்றும், இலக்கியங்கள், பதினெண், திரிகடுகம், கீழ்க்கணக்கு, பெரும், பசியும், பிறப்பின், செல்வமும், நெறி, சங்க, பெரு, பொருளை