திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக் கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி, - இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். |
46 |
நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறியை முறித்து வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம் கொண்டு உரைக்கும் கல்விச் சாலையும் அறிவுடையார் சேர மாட்டார்.
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும் தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள். |
47 |
மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும், - இம் மூவர் மெய்ப் பொருள் கண்டு வாழ்வார். |
48 |
வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக் கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் ஆவார்.
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர் இம்மைக்கு உறுதி இலார். |
49 |
மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத புதல்வனையும், தான் வாழும் வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும் உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும், இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர் வல்லே மழை அருக்கும் கோள். |
50 |
குடிமக்களை வருத்துகின்ற அரசனும், பொய் பேசுகின்ற மனிதரும், எல்லையைக் கடந்து நடக்கும் மனையாளும் இருக்குமிடத்தில் மழை பெய்யாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பொருள், திரிகடுகம், மூவர், பதினெண், கீழ்க்கணக்கு, கூழை, சோறு, பொய், பேசுகின்ற, மனையாளும், நெய், ஆவார், கண்டு, மகளிரும், தூய்மை, மேல், சங்க, இல்லாத, மூன்றும், சொல், அறிவுடையார், இகழ்ந்து