முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.075.திருவானைக்கா
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.075.திருவானைக்கா
7.075.திருவானைக்கா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
761 |
மறைக ளாயின நான்கும் துறையும் தோத்திரத் திறையும் அறையும் பூம்புனல் ஆனைக் இறைவன் என்றடி சேர்வார் |
7.075.1 |
வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே முதல்வன்' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.
762 |
வங்கம் மேவிய வேலை தங்கள் மேல்அட ராமை அங்கம் ஓதிய ஆனைக் எங்கள் ஈசன்என் பார்கள் |
7.075.2 |
மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற, தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக் கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சி செய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று 'இந் நஞ்சினை உண்டருளாய்' என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு, அதனால், கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எங்களுக்குத் தலைவன்' என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.
763 |
நீல வண்டறை கொன்றை சால வாள்அர வங்கள் ஆல நீழலுள் ஆனைக் ஏலு மாறுவல் லார்கள் |
7.075.3 |
நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும், பிறை ஒன்றும், பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.
764 |
தந்தை தாய்உல குக்கோர் பந்த மாயின பெருமான் அந்தண் பூம்புனல் ஆனைக் எந்தை என்றடி சேர்வார் |
7.075.4 |
உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய், ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும், உண்மையான தவத்தைச் செய்வோர்க்கு உறவான பெருமானும், அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய, அழகிய, குளிர்ந்த பூக்களையுடைய, நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எம் தந்தை' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.
765 |
கணைசெந் தீஅர வம்நாண் துணைசெ யும்மதில் மூன்றுஞ் அணையும் பூம்புனல் ஆனைக் இணைகொள் சேவடி சேர்வார் |
7.075.5 |
பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு, சிவந்த நெருப்பு அம்பாகியும், பாம்பு நாணியாகியும், மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க, ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய, எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.
766 |
விண்ணின் மாமதி சூடி பண்ணின் நேர்மொழி மங்கை அண்ண லாகிய ஆனைக் எண்ணு மாறுவல் லார்கள் |
7.075.6 |
விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி, விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும், பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும், ஆனேற்றை விரும்பி ஏறுபவனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர்.
767 |
தார மாகிய பொன்னித் நீரில் நின்றடி போற்றி ஈரம் உள்ளவர் நாளும் |
7.075.7 |
சோழன் ஒருவன், பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்துவடத்தை வீழ்த்தி, வீழ்த்திய வருத்தத்தால் கரைஏறாது நீரிற்றானே நின்று, தனது திருவடியைத் துதித்து, 'இறைவனே, எனது முத்து மாலையை ஏற்றுக்கொள்' என்று வேண்ட, அங்ஙனமே அவ்வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர், நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.
768 |
உரவம் உள்ளதொர் உழையின் விரைகொள் கொன்றையி னானை அரவம் வீக்கிய ஆனைக் இரவும் எல்லையும் ஏத்து |
7.075.8 |
வலிமையுள்ள மானினது தோல், புலியினது தோல் இவைகளை யுடையவனும், நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும், பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும், இரவிலும், பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.
769 |
வலங்கொள் வாரவர் தங்கள் கலங்கக் காலனைக் காலாற் அலங்கல் நீர்பொரும் ஆனைக் இலங்கு சேவடி சேர்வார் |
7.075.9 |
தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும், கூற்றுவனைக் காலாலும், காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியுமாறு வெகுண்டவனும் ஆகிய, அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது விளங்குகின்ற, செவ்விய திருவடியில் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.
770 |
ஆழி யாற்கருள் ஆனைக் நீழ லேசர ணாக வாழ வல்லவன் றொண்டன் ஏழு மாபிறப் பற்று |
7.075.10 |
சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள்புரிந்த, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன்போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்றொண்டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர், எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று, மேலே சென்று, எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவானைக்கா - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எம்மையும், நாளும், திருவானைக்காவைத், நாள்தோறும், காவுடை, ஆளுதலுடையவராவர், முதல்வனை, அடிமைகொண்டு, சேர்வார், கொண்டு, பூம்புனல், வல்லவர், நீரையுடைய, தலைவனும், குளிர்ந்த, உள்ளவனும், சென்று, சிறந்த, செவ்விய, காமனைக், நினைந்து, மாலையை, உடையவனும், பணிகின்றவர், சிவந்த, மாறுவல், திருமுறை, அடிபணிகின்றவர், அறிந்து, என்றடி, திருச்சிற்றம்பலம், பொருள்களும், திருவானைக்கா, நான்கும், கொன்றை, பொருந்திய, தங்கள், லார்கள்