முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.064.திருத்தினைநகர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.064.திருத்தினைநகர்
7.064.திருத்தினைநகர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநந்தீசுவரர்.
தேவியார் - இளங்கொம்பம்மை.
655 |
நீறு தாங்கிய திருநுத லானை கூறு தாங்கிய கொள்கையி னானைக் ஆறு தாங்கிய அழகனை அமரர்க் சேறு தாங்கிய திருத்தினை நகருட் |
7.064.1 |
மனமே, நீ, திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும், அந்நெற்றியில் ஒரு கண்ணை உடையவனும், வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும், குற்றம் சிறிதும் இல்லாதவனும், கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய, வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற, சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.
656 |
பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும் திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் |
7.064.2 |
மனமே, நீ, நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும், பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும்பினால், அதற்கு வழிசொல்லுவேன்; கேள்; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை, அழகிய, கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய, செறிந்த, நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, உலகமெல்லாம், முன்னிலையாகவும், படர்க்கையாகவும் நின்று துதிக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக; மனமே, அஞ்சாதி.
657 |
வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் முடியு மாகரு தேல்எரு தேறும் அடிகள் என்றடி யார்தொழு தேத்தும் செடிகொள் கான்மலி திருத்தினை நகருட் |
7.064.3 |
மனமே, நீ, மாவடுப்போலும் கண்ணிணைகளையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி, அம்மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல, வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி; மற்று, எருதில் ஏறுகின்ற மூர்த்தியும், எப்பொருட்கும் முதலாகிய பெருமானும், அடியார்கள், 'எம் அடிகள்' என்று வணங்கித் துதிக்கும் அப்பனும், இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய, புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.
658 |
பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற் காவ வென்றுழந் தயர்ந்துவி ழாதே அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி மாவின் ஈருரி உடைபுனைந் தானை தேவ தேவனைத் திருத்தினை நகருட் |
7.064.4 |
மனமே, நீ, அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினைகளையே செய்தும், பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து, உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி; மற்று, உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை, நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து, புலியினது உரித்த தோலை உடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும், தேவர்களுக்கு அமுதம் போல்பவனும், அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.
659 |
ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட் என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் குன்று லாவிய புயமுடை யானைக் சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட் |
7.064.5 |
உளமே, ஒரு பொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து, அந் நினைவின் வழியே, 'மெய் வருந்த, அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும்' என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை; மனமே, மலைபோலும் தோள்களை உடையவனும், பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக.
660 |
வேந்த ராய்உல காண்டறம் புரிந்து தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப் பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப் சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் |
7.064.6 |
மக்கள், அரசராய் நின்று உலகத்தை ஆண்டு, செங்கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை, இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று, பின்பு விட்டு நீங்கி, கொடிய துன்பத்தை நுகர்கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை, மனமே, சிறிதும் விரும்பாது விடு; மற்று, மனமே, பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும், யாவர்க்கும் மேலானவனும், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய, திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக.
661 |
தன்னில் ஆசறு சித்தமும் இன்றித் பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற் முன்னெ லாம்முழு முதலென்று வானோர் செந்நெ லார்வயல் திருத்தினை நகருட் |
7.064.7 |
மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது, தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி, பின்னுதல் பொருந்திய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொள்ளுதலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே, மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க, நீ, தேவர்கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய, செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று, இவனே, தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
662 |
பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும் பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற் கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக் செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட் |
7.064.8 |
மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களையுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய, செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி, அணுகச் சென்று அடைவாயாக.
663 |
நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன் சமய மாகிய தவத்தினார் அவத்தத் உமையொர் கூறனை ஏறுகந் தானை சிமய மார்பொழில் திருத்தினை நகருட் |
7.064.9 |
மனமே, நீ நன்மையை அடையவிரும்பினால், நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே, உமையை ஒரு பாகத்தில் உடையவனும், எருதை விரும்பி ஏறுபவனும், தேவர்கட்கு முதல்வனும், எங்கட்குத் தலைவனும் ஆகிய, மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக.
664 |
நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து சேடு லாம்பொழில் திருத்தினை நகருட் நாட லாம்புகழ் நாவலூ ராளி பாட லாந்தமிழ் பத்திவை வல்லார் |
7.064.10 |
எல்லையில்லாத, நிலையற்ற பிறவியை வெறுத்து, அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தௌவித்து, திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும், புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது, மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தினைநகர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருத்தினை, சிவக்கொ, நன்மையின், சென்று, நகருட், எழுந்தருளியிருக்கின்ற, பெருமானை, அடைவாயாக, சென்றடை, ழுந்தினைச், அணுகச், நகரில், மேலெல்லையாய், பொருந்திய, தாங்கிய, உடையவனும், தலைவனும், சோலைகளையுடைய, திருத்தினைநகரில், சிறிதும், திருமுறை, பலருங், பயனில்லாத, நீங்கி, நன்மையை, உடலைப், பிரிந்து, மேலெல்லையாகிய, விரும்பி, செருந்தி, நிச்சயம், மக்கள், விட்டொழி, என்றும், துணிந்து, திருத்தினைநகர், பின்பு, திருவடி, உள்ளவனும், தேவர்களுக்கு, மூர்த்தி, போல்பவனும், யாவர்க்கும், நிறைந்த, திருச்சிற்றம்பலம், அடிகள், வாழ்வினை