முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.062.திருக்கோலக்கா
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.062.திருக்கோலக்கா
7.062.திருக்கோலக்கா
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசுவரர்.
தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
635 |
புற்றில் வாளர வார்த்தபி ரானைப் பற்று வான்துணை எனக்கௌ வந்த முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும் கொற்ற வில்அங்கை ஏந்திய கோனைக் |
7.062.1 |
புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும், பூத கணங்கட்கு முதல்வனும், தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும், எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும், அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும், யாவராலும் அடைதற்கு அரியவனும், செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு, திருமால் அம்பாகி நிற்க, வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
636 |
அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளி தங்கு மாதிரு வுருவுடை யானைத் தழல்ம திசடை மேற்புனைந் தானை வெங்கண் ஆனையின் ஈருரி யானை விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங் கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.062.2 |
துணை நூல்களாகிய ஆறும், முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும், மூங்கில் போலும் தோள்களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள, சிறந்த திருமேனியையுடையவனும், ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும், சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், விண்ணில் உள்ளவர்களும், மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற, தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்காவினில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
637 |
637பாட்ட கத்திசை யாகிநின் றானைப் நாட்டகத் தேவர் செய்கையு ளானை காட்ட கத்துறு புலியுரி யானைக் கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் |
7.062.3 |
பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும், அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும், மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும், நடனம் ஆடுபவனும், நமக்குத் தலைவனும், காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும், கண்கள் மூன்று உடைய பெருமையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
638 |
ஆத்த மென்றெனை ஆள்உகந் தானை வார்த்த யங்கிய முலைமட மானை தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் கூத்த னைக்குரு மாமணி தன்னைக் |
7.062.4 |
என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்குவாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளினவனும், தேவர்கட்குத் தலைவனும், முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து, வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும், மங்கலம் உடையவனும், செழுமையான தேன்போல இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும், ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
639 |
அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த கொன்றி னான்றனை உம்பர்பி ரானை குன்ற வில்லியை மெல்லிய லுடனே |
7.062.5 |
அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து, அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும், நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க' என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று, பின்பு, திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த, முத்தினது திரட்சியமைந்த கொத்துப் போல்பவனும், முத்தியளித்தற்குப் பொருந்தியவனும், தேவர்கட்குத் தலைவனும், உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த, மலைவில்லை உடையவனும் ஆகிய இறைவனை, இறைவியுடனே, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.
640 |
காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் |
7.062.6 |
காற்றும், தீயும், நீரும் ஆகி நிற்பவனும், எல்லாப் பொருள்களையும் கடந்தவனும், கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும், நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும், நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த, ஒலிக்கின்ற கழலை யணிந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
641 |
அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த மின்ற யங்கிய இடைமட மங்கை கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார் |
7.062.7 |
அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப்படுத்தியவனும், நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடியில் சிலம்பையணிந்த ஒளிவவடிவினனும், விளக்குப்போலும் விளக்கம் உடையவனும், மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும், மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த, அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன், அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
642 |
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் கோளி லிப்பெருங் கோயிலு ளானைக் |
7.062.8 |
எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு, அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி, பலரு காணத் தாளம் ஈந்த கருணையாளனும், என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும், தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல்களைப்பாட, அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும், பதினெண் கணங்களாலும் வணங்கப்படுபவனும், திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
643 |
அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம் குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் |
7.062.9 |
அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து, பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும், விரிந்த உலகத்தைப் படைத்தும், உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும், தலையில் அமைந்து, 'கண், வாய், காது, மூக்கு' என்பவற்றோடு, நீண்ட உடம்புமாய் நின்று, தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன்,சோலைகளில் குரங்குக்கூட்டம் குதித்துத் திரிகின்ற, வயல் சூழ்ந்த, திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.
644 |
கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் பாட ரங்குடி அடியவர் விரும்பப் நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் காட ரங்கென நடம்நவின் றான்பாற் |
7.062.10 |
ஆலம் விழுது போலும் சடைகளை யுடையவனும், கரும்பு போல இனிப்பவனும் ஆகிய, திருக்கோலக்கா வில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு, அத்திருத் தொண்டிலே பழகும், திருநாவலூரில் தோன்றிய, வன்றொண்டனாகிய நம்பியாரூரன், உலகில் உள்ளவர்தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாடிய மாந்தர், காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர்; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோலக்கா - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவனை, அடியேன், கண்டுகொண், காவினிற், வெளிப்படக், கண்டுகொண்டேன், உடையவனும், நின்று, யுடையவனும், தலைவனும், திருக்கோலக்கா, நிறைந்த, திருக்கோலக்காவில், வாழும், உள்ளவனும், தேவர்கட்குத், நிற்பவனும், யங்கிய, ஆடுகின்ற, இனிப்பவனும், வைத்து, காட்டி, பின்பு, உயிரைப், கொன்றை, திருநாவலூரில், மாந்தர், பூதங்கள், அடியவர், செழுமையான, இரங்கி, பொருந்திய, பெருமானும், சிறந்த, மூன்று, ஏந்திய, புற்றில், திருமுறை, திருச்சிற்றம்பலம், அழியுமாறு, நான்கும், மண்ணில், திருக்&, மானைக், உள்ளவர்களும், சடையின், நூல்களாகிய, போலும், எல்லாப்