முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.048.திருப்பாண்டிக்கொடுமுடி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.048.திருப்பாண்டிக்கொடுமுடி

7.048.திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதர்.
தேவியார் - பண்மொழியாளம்மை.
488 |
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.1 |
கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே, எனக்கு வேறு துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்திலதுணியப்பெற்றேன்; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய்ப் பிறந்தவனாயினேன்; அதுவன்றி, இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன்; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
489 |
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந் கெட்ட நாள்இவை என்ற லாற்கரு வட்ட வாசிகை கொண்ட டிதொழு நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.2 |
மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற. 'திருப்பாண்டிக் கொடுமுடி, என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தோழமை கொண்டவனே, உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான், உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் 'இவன் நிலையில்லாத மனத்தையுடையவன்' என்று இகழப்பட்ட நாள்களும், அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை, அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன்; ஆதலின், நான் உன்னை மறக்கினும், என்நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
490 |
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் காவு நாள்இவை என்ற லாற்கரு பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.3 |
மேலான ஒளியாய் உள்ளவனே, மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற, 'திருப் பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நா வன்மை யுடையவனே, அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை, என் உணர்வு அழிந்த நாள்களும், உயிர்போன நாள்களும், உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி, வேறு நல்ல நாளாகக் கருதமட்டேன; ஆதலின், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
491 |
எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.4 |
எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே, எந் தந்தைக்கும் தலைவனே, என் பொன்போல்பவனே, என் மணி போல்பவனே,மணிகளைத் தள்ளிவந்து, எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண். நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற, புகழையுடைய கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே, உன்னை நான் மறந்தாலும் என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை இடையறாது சொல்லும்.
492 |
அஞ்சி னார்க்கர ணாதி என்றடி அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் |
7.048.5 |
ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன்; அதனையறிந்து நீ அவ்வண்ணமே 'அஞ்சேல்' என்று சொல்லி அணைத்து, அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய்; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன்; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
493 |
ஏடு வான்இளந் திங்கள் சூடினை ஆடு பாம்ப தரைக்க சைத்த பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சேட னேஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.6 |
கொல்லுகின்ற புலியினது தோலின் மேல், ஆடுகின்ற பாம்பை, அரையின்கண் கட்டியுள்ள அழகனே, அழகிய, ஆழ்ந்த காவிரியாற்றினது, ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே, பெருமையுடையவனே நீ, வானத்தில் தோன்றுகின்ற, பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய்; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என்! அதனால், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
494 |
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.7 |
தென்னங் குரும்பைபோலும், மெல்லிய கொங்கைகளையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது, வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, விரும்பப்படுபவனே, அடியேன், உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன்; அதனால், நீங்குதற்கரிய வினைகளும் நீங்கின; இனி, உன்னைநான் மறந்தாலும், என்நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
495 |
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் வம்பு லாங்குழ லாளைப் பாக கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.8 |
செம்பொன்போலும் சடையையுடையவனே, திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து, காவிரியாற்றினது கரையின்கண் உள்ள, சோலைகளில், கிளைகளின்மேற் குயில்கள் கூவ, சிறந்த மயில்கள் ஆடுகின்ற, 'திருப்பாண்டிக்கொடு முடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
496 |
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை பேரெ ணாயிர கோடி தேவர் நார ணண்பிர மன்தொ ழுங்கறை கார ணாஉனை நான்ம றக்கினுஞ் |
7.048.9 |
திருமாலும், பிரமனும் வணங்குகின்ற, கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக்கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே, அளவற்ற தேவர்; 'எமக்குப் புகலிடமானவன்; எம்தந்தை; எம்தலைவன்; எம் தந்தைக்கும் தலைவன்; எங்கள் பொன்; எங்கள் மணி' என்று சொல்லி, உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று, உன்னைப் பிரியமாட்டார்; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.
497 |
கோணி யபிறை சூடி யைக்கறை பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத் நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை |
7.048.10 |
வளைந்த பிறையைச் சூடினவனும், தலைக் கோலம் உடையவனும், பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும், இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும்' படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள 'திருப்பாண்டிக்கொடுமுடி' என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுவார்க்குத் துன்பம் இல்லையாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாண்டிக்கொடுமுடி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொடுமுடி, என்னும், பாண்டிக், எழுந்தருளியிருக்கின்ற, சொல்லும்நா, நமச்சி, கோயிலில், றக்கினுஞ், என்பதனை, சொல்லும், இடையறாது, திருப்பெயராகிய, நமச்சிவாய, மறந்தாலும், திருப்பாண்டிக், காவிரியாற்றினது, திருப்பாண்டிக்கொடுமுடி, கறையூரில், நாள்களும், யூரிற், விரும்பி, பாய்கின்ற, உடையவனும், அடியேன், துதிக்கின்ற, அதனால், வணங்கித், புகழையுடைய, தந்தைக்கும், கரைக்கண், யுடையவனே, மார்குடைந், ஆடுகின்ற, பிதற்றி, நின்று, எங்கள், உள்ளவனே, சொல்லி, மூழ்கி, விளையாடுகின்ற, அச்சமுற்று, மெல்லிய, மிக்கு, எனக்கு, நாள்இவை, லாற்கரு, சீர்க்கறை, தேத்துஞ், திருமுறை, திருச்சிற்றம்பலம், வர்தொழு, தேன்கி, ளர்புனற், காவிரிப், தண்புனல், ழிபரஞ், ஆதலின், அழிந்த, வருகின்ற, நீரையுடைய, ஒளியாய்