முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.004.திருவதிகைவீரட்டானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.004.திருவதிகைவீரட்டானம்

6.004.திருவதிகைவீரட்டானம்
அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
2118 | சந்திரனை மாகங்கை திரையால் மோதச் கந்தருவம் விரும்புமே கபால மேந்து பந்தணவு மெல்விரலாள் பாக னாமே ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே |
6.004.1 |
சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். மண்டையோட்டை ஏந்தியகையினன். பொன்னார் மேனியில், மெல்லிய விரலில் பந்தினை ஏந்தியபார்வதி பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி. ஐந்தலைப்பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகைவீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே.
2119 | ஏறேறி யேழுலகும் உழிதர் வானே பாறேறு படுதலையிற் பலிகொள் வானே நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே |
6.004.2 |
காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன். தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன். பருந்துகள் படியும், மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன். தன்பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன். நீறு படிந்த செழுமையானபவள மலையை ஒத்த வடிவினன். நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன். கங்கைதங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன். இத்தகைய பெருமான் அதிகைவீரட்டனாவான்.
2120 | முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே |
6.004.3 |
இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன். உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன். கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன். கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன். இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன். ஐம்பெரும்பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.
2121 | செய்யனே கரியனே கண்டம் பைங்கண் வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச் கையனே காலங்கள் மூன்றா னானே ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே |
6.004.4 |
நிறத்தால் செய்யவன். கண்டம் கறுத்தவன். பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன். அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன். குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன். சூலத்தைத் தாங்கும் கையினன். முக்காலங்களாகவும் உள்ளவன். கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன். உயரமும் பருமையும் உடைய காளைவாகனன். இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே.
2122 | பாடுமே யொழியாமே நால்வே தம்மும் சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ் கூடுமே குடமுழவம் வீணை தாளங் கூத்தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே |
6.004.5 |
இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன். பரவிய உடையின் மீது ஒளிசிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன். தன் இடையில்விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன். கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குட முழா, வீணை, தாளம் இவற்றை ஒலிக்குமாறு, ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன். அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன். அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே.
2123 | ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே |
6.004.6 |
தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத்தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன். தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன். நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன். ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன். வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன். பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகைவீரட்டத்தானே. பாம்பினையும் சுற்றியிருப்பவன். கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குட முழா, வீணை, தாளம் இவற்றை ஒலிக்குமாறு, ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன். அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன். அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே.
2124 | குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே அழலாடு மேஅட்ட மூர்த்தி யாமே |
6.004.7 |
குழல், கொக்கரை, மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன். திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி, அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன். அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன். ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன். எட்டு உரு உடையவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.
2125 | மாலாகி மதமிக்க களிறு தன்னை மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம் கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக் ஆலால முண்டிருண்ட கண்டத் தானே |
6.004.8 |
மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்ற அதன் தோலினைத் தனியே உரித்துக் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன். ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.
2126 | செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ் வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல் நம்பனே நான்மறைகள் தொழநின் றானே அம்பனே அண்டகோ சரத்து ளானே |
6.004.9 |
செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான், இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன். வலக்கையில் மழுப்படையை உடையவன். நம்மால் விரும்பப்படுபவன். நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன். அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன். எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்த நிற்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.
2127 | எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள் கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே |
6.004.10 |
கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன். கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த, கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது. சந்தனமும், நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந்துள்ளான். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.
2128 | நெடியானும் நான்முகனும் நேடிக் காணா கொடியேறு கோலமா மணிகண் டன்னே பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே |
6.004.11 |
தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும்தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன். தன்சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன். கொலைத்தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன்.திருநீறு பூசிய திருமேனியினன். பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக்கருதி மேலுலகங்களிலும் திரிபவன். தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறுசெய்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவதிகைவீரட்டானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அதிகைவீ, பெருமான், அத்தகைய, வீரட்டனே, ஆடுபவன், உடையவன், ஒலிக்குமாறு, உள்ளவன், சிவந்த, கொண்டவன், பூதங்கள், மேம்பட்ட, மார்பில், இத்தகைய, பாகமாகக், முதலிய, அடியிடும், திருமேனியில், உமாதேவியைத், ஏற்பட்ட, வாயினை, நடையினை, ளானேஅவனாகில், ஐந்தொழில்களையும், செய்யும், கையொன்றில், ஏந்துபவன், கூத்தினை, இவற்றை, கொவ்வைக், சடையினன், அமைந்த, பிறையைச், சூடியவன், காட்சி, பிச்சை, சுற்றி, திருமுறை, திருச்சிற்றம்பலம், மெல்லிய, தானேஅவனாகில், திருமேனியினன், அணிந்தவன், குளிர்ந்த, திருவதிகைவீரட்டானம், பெருமானே, பாம்பினையும், அடியார்களுடைய, றானேஅவனாகில், இருப்பவன், கண்டம், வினைகள், சுற்றியிருப்பவன்