முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.038.திருவையாறு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.038.திருவையாறு
6.038.திருவையாறு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
2465 | ஓசை யொலியெலா மானாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே |
6.038.1 |
திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இறியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய்.
2466 | நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே |
6.038.2 |
ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய்! பசி, பிணி முதலியவற்றினால் வருந்தாத படி அருட்பார்வையால் காப்பவன். நீ, அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய். மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய். கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய். உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய். மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய். இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய்.
2467 | கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே சினத்திருந்த திருநீல கண்டன் நீயே |
6.038.3 |
திருவையாறு அகலாத செம்பொன் சோதியே! நீ மேகத்தில் மின்னல்களாகவும், கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும், மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும், உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள எல்லவனாகவும், அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும், என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும், சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய்.
2468 | வானுற்ற மாமலைக ளானாய் நீயே ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே |
6.038.4 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய். புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய். சடையில் பிறை, பாம்பு, கங்கை இவற்றை வைத்தாய். பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய். அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய். தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய்.
2469 | பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே திண்ணார் மழுவாட் படையாய் நீயே |
6.038.5 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய், மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய், வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய்.
2470 | உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே கற்றிருந்த கலைஞான மானாய் நீயே பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே செற்றிருந்த திருநீல கண்டன் நீயே |
6.038.6 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய். அடியவர்கள் சுற்றமாக உள்ளாய். கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய். பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய். பிரானாய் அடி என்மேல் வைத்தாய். நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய்.
2471 | எல்லா உலகமு மானாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே |
6.038.7 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய், ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய், நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய், ஞான ஒளி வீசும் விளக்காய், கொடிய வினைகளைப் போக்கு பவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.
2472 | .ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே தேவ ரறியாத தேவன் நீயே |
6.038.8 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், எல்லையற்ற பெருமையை உடையவனாய், பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய், போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய், நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய், நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய், ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய்.
2473 | எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே |
6.038.9 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய். ஏகம்பம் மேவிய இறைவன் நீ. வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன். சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன். அடியார்கள் உன் திருத்தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய். தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய். திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய்.
2474 | விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே |
6.038.10 |
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ!நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய். தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய். பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய். பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய். அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய். தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய். திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய்.
2475 | ஆரு மறியா இடத்தாய் நீயே பேரும் பெரிய இலங்கை வேந்தன் ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே |
6.038.11 |
ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய். வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய். பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய். வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய். பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய். அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வைத்தாய், செம்பொற், உள்ளாய், நின்றாய், திருவையாறு, நீயேதிருவையா, திருவடிகளை, மானாய், வடியென்மேல், வல்லாய், உடையாய், செம்பொன், முடியாத, தலைமேல், கண்டன், சிவந்த, உடையவனாய், வீசும், சோதியாகிய, கமழும், சொற்களை, அழித்தாய், மழுப்படையை, அபிடேகத்தை, எல்லாம், யடியென்மேல், திருவையா, நீயேதூமலர்ச்சே, வைத்தவனாய், என்மேல், இறைவன், நஞ்சினை, நீயேஏகம்ப, திண்ணிய, திருநீல, விடுத்து, நீங்காத, யுடையாய், திருவையாற்றை, அடியென்மேல், திருமுறை, திருச்சிற்றம்பலம், காத்தாய், நீயேஅடியானென், யிருந்தாய், படையாய், ஐந்தும், அறிந்து, கொண்டாய், றடியென்மேல், அடியவன், அமர்ந்தாய்