முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.035.திருவெண்காடு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.035.திருவெண்காடு
6.035.திருவெண்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
2435 | தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் பூண்டு பொறியரவங் காதிற் பெய்து நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி |
6.035.1 |
தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த, உலகியலுக்கு வேறுபட்ட பெருமான், தூண்டப்பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து, சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, காதிலும் பாம்பினை அணிந்து, பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
2436 | பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர் ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார் |
6.035.2 |
வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து, பாதலத்தையும் கடந்து, கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய், யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய், ஊழி வெள்ளத்தின் ஒலி, உலகையெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது, தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர்.
2437 | நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார் நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ மென்முலையார் கூடி விரும்பி யாடும் |
6.035.3 |
மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக 'இதோ வந்துவிட்டேன்' என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார்.'உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது? உம்முடைய ஊர்யாது?' என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்றுபின் சென்று விட்டார்?
2438 | ஆகத் துமையடக்கி யாறு சூடி போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப் பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப் மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த |
6.035.4 |
பார்வதியைப்பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப்பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச்சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்றஅவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக்கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத்தீ வினையை உடைய என் வளைகளை, மேக மண்டலத்தைஅளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார்கவர்ந்து சென்றுவிட்டார்.
2439 | கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற் வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் |
6.035.5 |
மிக்கஒளியை உடைய குழைகளை அணிந்த, பருத்துக் குறியவடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட, என உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுபோவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார். நான்அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன். என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால்பார்க்கிறார். கண்ணுக்கு அகப்படுபவரைப் போலக்காட்டி மறைந்து நிற்கிறார். அவர் கங்கையைச் சடையில் கொண்டவர். வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர்.
2440 | தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார் கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர் |
6.035.6 |
காலையும்மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியைஉடையவராய், வேதம் ஓதும் நாவினராய், வெண்காடு மேவியவிகிர்தனார், ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்றபடைகளை ஏந்தியவராய், ஒளி வீசும் கொன்றைப் பூமாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப்பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக்காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த்தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர்போல, முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக்காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில்அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்றுவிட்டார்.
2441 | பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக் உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப் விண்பால் மதிசூடி வேதம் ஓதி |
6.035.7 |
நங்காய்! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி, வேதம் ஓதி, வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு, பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார். உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா. அவர் விடம் ஒன்றே உண்பார். அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார். அழகாக விரிந்த சடையுடையவர். என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார்.
2442 | மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித் கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல் விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி |
6.035.8 |
வெண்ணிறக்காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடிவேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப்புகைத்து, 'எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ' என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்டசெயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்துசெல்வர்.
2443 | புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் உள்ளானை யொன்றலா உருவி னானை கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார் |
6.035.9 |
வெண்காடுமேவிய விகிர்தனார், கருடனை உடைய திருமாலும் நான்குமுகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச்சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும்அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப்பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய், அடியார்கள்விரும்பும் பல உருவங்களையும் உடைய வராய்த் தேன் நிறைந்தகொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில்நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்குஅது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர்.
2444 | மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக் வீக்கந் தவிர்த்த விரலார் போலும் |
6.035.10 |
வெண்காடுமேவிய விகிர்தனார் கோவர்த் தனத்தைக் குடையாகஉயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க்கரும்பையேவில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர். கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்காடு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விகிர்த, விகிர்தனார், வெண்காடு, கொண்டு, இவர்ந்து, விரும்பி, உடையவராய், நோக்கி, உறங்குவார், பூதங்கள், வெண்ணிறக்காளையை, நாவர்வெண்காடு, உண்பார், சடைமுடியர், கவர்ந்து, எம்பெருமான், வரங்களைக், நின்றான், வெண்காடுமேவிய, வேண்டிய, பிரமனும், வேண்டும், வரங்கொ, திருமாலும், வளைகவர்ந்தார், புகுந்து, காளையை, கையில், பாம்பினை, றேறிவெண்காடு, வெள்ளே, திருமுறை, திருச்சிற்றம்பலம், பூண்டு, அணிந்து, செய்து, திருவெண்காடு, நின்று, திருவடி, கொள்ளும், திருவடிகளை, மனத்துக், கூர்ந்து