முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.031.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.031.திருவாரூர்
6.031.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2395 | இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந் கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும் |
6.031.1 |
நெஞ்சே! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள். செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே! திருநீறணிந்த தோளனே! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே! மான் குட்டியை ஏந்திய கையனே! ஆற்றலுடைய காளை வாகனனே! கிட்டுதற்கரிய அமுதே! எல்லோருக்கும் முற்பட்டவனே! ஆரூரனே! எனப்பலகாலும் அழைப்பாயாக.
2396 | செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் பொடியேறு திருமேனி யுடையா யென்றும் அடியேனை யாளாகக் கொண்டா யென்றும் கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங் |
6.031.2 |
நெஞ்சமே! துன்பம்மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே! அடியேனை அடிமையாகக் கொண்டவனே! தலைவனே! ஆரூரில் உள்ள எம் அரசனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே! கற்பகமே! என்று பலகாலும் அழைப்பாயாக.
2397 | நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் |
6.031.3 |
நெஞ்சே! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் 'சங்கரா நீ வெல்க வாழ்க!' என்றும் 'கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே!' என்றும் 'ஆரூரா!' என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக.
2398 | புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம் நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் எண்ணரிய திருநாம முடையா யென்றும் |
6.031.4 |
நெஞ்சமே! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள். பூணூல் அணிந்த மார்பனே! தூண்ட வேண்டாத விளக்கே! தேவர்களும் நால்தேவங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே! அழகிய ஆரூரனே! என்று பலகாலும் துதிப்பாயாக.
2399 | இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால் பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய் குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே |
6.031.5 |
நெஞ்சே! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்துவாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே! தலைக்கோலம் உடையவனே! நீலகண்டனே! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன். ஆரூர் உறையும் அழகா! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே! என்றும் கூப்பிடு. உனக்கு இவ்வாறு உபதேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது. செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே.
2400 | நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும் பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந் |
6.031.6 |
நெஞ்சே! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன். நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்குபவனே! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் 'நெஞ்சே நீ நினை'.
2401 | பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் |
6.031.7 |
நெஞ்சே! நான் சொல்வதனைக் கேட்பாயாக. நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், செயலற்று இராமல் நான்சொல்வதைக் கேள், எனக்கு உறவினரும் துணையும் நீயே, உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழத்தக்கபாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக.
2402 | மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும் துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் கதிர்மதிசேர் சென்னியனே கால காலா |
6.031.8 |
நெஞ்சமே! உனக்குநான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன். பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே. தேவர்கள் தலைவனே! அரிய அமுதமே! ஆதியே! என்றும், தலைவனே! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும், அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி, அவன் கோயிலை வலம் செய்து, தொண்டர்களையும் துதித்து, ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே! காலனுக்கும் காலனே! கற்பகமே! என்றும் பலகாலும் கதறுவாயாக.
2403 | பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே தேசத் தொளிவிளக்கே தேவ தேவே நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும் |
6.031.9 |
நெஞ்சே! மேம்பட்ட சோதியே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! பாவத்தைப் போக்குபவனே! உலகுக்கே ஒளிதரும் விளக்கே! தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே! தேவர்கள் தலைவனே! எம்பெருமானே! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக. இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம்.
2404 | புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும் இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும் நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும் |
6.031.10 |
நெஞ்சே! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து, மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல், என்பக்கம் வந்துயான் சொல்வதனைக் கேள். கங்கையைச் சடையில் சூடியதலைவா! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே! என்று நாள் தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக. அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெஞ்சே, என்றும், நில்லே, பலகாலும், தலைவனே, நெஞ்சமே, உடையவனே, அழைப்பாயாக, திருமேனி, ஆரூரனே, துதிப்பாயாக, உறையும், சடையில், ராவென்றே, சொல்வதனைக், ஆரூரில், நான்முகனும், அணிந்த, வேண்டும், பிரமனும், திருமாலும், விளக்கே, வழியைக், தேவர்கள், செய்து, வீழ்ந்து, நின்று, விரும்பினால், மேம்பட்ட, இவ்வாறு, தேவர்களும், குற்றம், நிற்கும், உனக்கு, புகழ்ந்து, யென்றும், திருநீறணிந்த, தீவினைகள், புனிதா, ஆரமுதே, வென்றுங், திருமுறை, திருச்சிற்றம்பலம், றெண்ணுதியேல், யென்றும்அம்மானே, யென்றென்றே, போற்றி, பெருக்கி, அவனைத், கங்கையைச், கூத்து, திருவாரூர், சோலைகள், சூழ்ந்த, கற்பகமே, புண்ணியமும்