முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.029.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.029.திருவாரூர்
6.029.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2375 | திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் அருமணியை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.1 |
செல்வம் தரும் சிந்தாமணியாய், இனிக்கும் தேன், பால், கருப்பஞ்சாறு, தௌவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய், குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க அணிகலனாய், பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாதுநாய் போன்ற, அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது.
2376 | பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப் மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னை தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் அன்னானை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.2 |
பொன்னார் மேனியனை, வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை, பார்வதிபாகனை, யானைத்தோல் போர்வையனைத், தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை, மெய்ப்பயனை, மேம்பட்டவனை, தழல்போன்ற செந்நிற மேனியனை -இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2377 | ஏற்றானை ஏழுலகு மானான் தன்னை கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக் காற்றானைத் தீயானை நீரு மாகிக் ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.3 |
இடபவாகனனாய், ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய், மழுப்படை ஏந்திய கையனாய், காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள, ஆரூரிலுள்ள, அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2378 | முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச் மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.4 |
முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய், மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சங்கினாலாகிய காதணியை உடையவனாய், மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2379 | பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி அறநெறியை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.5 |
பிறக்கும் வழிகளாகவும், பெருமையாகவும், தலைக்கோலம் அணிந்தவனாகவும், பித்தனாகவும், அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும், வேள்வியாகவும் அமைந்து, சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப்பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2380 | பழகியவல் வினைகள் பாற்று வானைப் குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் விழவனை வீரட்டம் மேவி னானை அழகனை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.6 |
பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய், அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய், பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய், விழாக்களில் மேவி இருப்பவனாய், வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே.
2381 | சூளா மணிசேர் முடியான் தன்னைச் கோள்வா யரவ மசைத்தான் தன்னைக் நாள்வாயும் பத்தர் மனத்து ளானை ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை |
6.029.7 |
சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய். திருநீறு தரித்த ஒளியினனாய், கொடிய பாம்பினை, இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய், எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய், ஆடை அற்றவனாய், முக்கண்ணனாய், எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2382 | முத்தினை மணிதன்னை மாணிக் கத்தைத் கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து பத்தனைப் பத்தர் மனத்து ளானைப் அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை |
6.029.8 |
முத்து, மணி, மாணிக்கம், என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து, வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய், எல்லோரிடத்தும் அன்புடையவனாய், பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய், சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய், எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2383 | பையா டரவங்கை யேந்தி னானைப் நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச் ஐயாறு மேயானை ஆரூ ரானை |
6.029.9 |
படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய், நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய், நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப் பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.
2384 | சீரார் முடிபத் துடையான் தன்னைத் பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப் போரார் புரங்கள் புரள நூறும் ஆரானை ஆரூரி லம்மான் தன்னை |
6.029.10 |
அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய், வெண்ணீறு அணிந்தானாய், அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அயர்த்தவாறே, அறியாது, அம்மானை, தன்னைஅறியா, அடிநாயேன், னயர்த்த, தடிநாயே, லம்மான், மானான், இளையவனாய், பத்தர், உடையவனாய், அணிந்த, அயர்த்த, தடிநாயேன், திருமேனி, கையில், அழியுமாறு, திருமேனியை, பாம்பினை, இருப்பவனாய், சூரியனைப், குழகன், ஆரூரில், தலைவனாய், கற்பகத்தின், கொழுந்து, அம்மான், மனத்து, நாயேன், ஆரூரிலுள்ள, போக்கும், இதுகாறும், யுடையான், முத்து, போன்றவனாய்ச், திருமுறை, திருச்சிற்றம்பலம், மேனியனை, காட்சி, உடையவனாய்ச், எல்லோருக்கும், திருவாரூர், நறுமணம், கொண்டதோர், கையான், உள்ளத்தில்