முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.024.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.024.திருவாரூர்
6.024.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2327 | கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண் எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண் செம்மானத் தொளியன்ன மேனியான்காண் |
6.024.1 |
துதிக்கையையும், பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய், கண் பொருந்திய நெற்றியை உடையவனாய், எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய், எங்களுக்குத் தலைவனாய், ஏழுலகும் பரந்தவனாய், எரிகின்ற விளக்குப் போல்பவனாய், விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்திற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய், என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான்.
2328 | ஊனேறு படுதலையி லுண்டி யான்காண் ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண் மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண் தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண் |
6.024.2 |
புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய், ஓங்கார வடிவினனாய், ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய், திருவையாற்றில் உறைபவனாய், எல்லா உலகங்களும் பரவினவனாய், அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய், கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.
2329 | ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண் தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண் ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண் தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண் |
6.024.3 |
திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன். அவன் இறைவனாய், மறை ஓதுபவனாய், நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய், சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய், ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய், அடியார்க்கு அமுதமாயினவன். தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான். அவன் என் சிந்தையான்.
2330 | கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண் எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண் பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண் செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண் |
6.024.4 |
திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன். கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன். எங்கள் துயரைப் போக்கும் தலைவன். ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன். அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன். பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன். அவன் என் சிந்தையான்.
2331 | காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண் போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண் நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண் சீரேறு திருமாலோர் பாகத் தான்காண் |
6.024.5 |
திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன். நீல கண்டன். நெற்றிக்கண்ணன். காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன். புண்ணியன், குணபூரணன். நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன். மாசற்றவன். தன் நிகர் இல்லாதவன். சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன். அவன் என் சிந்தையான்.
2332 | பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண் கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண் இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண் சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண் |
6.024.6 |
திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன். பிறப்பற்றவன். ஆண், பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன். நீலகண்டன். வெண்ணீற்றன். தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப்பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன். கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன். பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன். சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன். அவன் என் சிந்தையுளான்.
2333 | தலையுருவச் சிரமாலை சூடி னான்காண் அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண் கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண் சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண் |
6.024.7 |
திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன்.மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன். பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன். சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன். கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன். ஐம்பூதங்களும் ஆகியவன். வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன். அவன் என் சிந்தையானே.
2334 | ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண் கையன்காண் கடற்பூதப் படையி னான்காண் வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண் செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண் |
6.024.8 |
திருவாரூர்ப் பெருமான் தலைவனாய், என்றும் இளையவனாய், எல்லோருக்கும் ஆதியாய், மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய், வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய், வெண்ணீறு அணிந்தவனாய், அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய், வெண்மை, செம்மை, கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான்.
2335 | மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண் இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண் கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண் சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண் |
6.024.9 |
திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய், இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய், எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன். கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன். அவன் என் சிந்தையான்.
2336 | பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண் மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண் எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண் |
6.024.10 |
திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன். பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி, பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி, ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். அவன் என் சிந்தையான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரான்காண்என், சிந்தை, பெருமான், திருவாரூர்ப், உடையவன், சிந்தையான், தான்காண்திருவாரூ, உடையவனாய், திருவாரூரில், அப்பெருமான், கடலில், நஞ்சுண், மலர்க்கொன்றை, ஆகியவன், சூடியவனாய், மாலையைச், உறைபவன், தோன்றிய, போக்கும், நஞ்சினை, சரந்துரந்த, திறத்தி, னான்காண்திருவாரூ, செம்மை, எல்லோருக்கும், உண்டவன், மில்லா, இல்லாதவன், அஞ்சத்தக்க, செலுத்தும், தீயில், கூத்து, சூலத்தை, தலைவனாய், னான்காண், நெற்றி, திருமுறை, திருச்சிற்றம்பலம், யான்காண், காண்கண்ணார், உறைபவனாய், காட்சி, சுடர்ச்சூலப், திருவாரூர், அழித்தவன், அழிக்கும், மறையவன்காண், தான்காண்இறையவன்காண், வழங்குகின்றான், யான்காண்திருவாரூ, தலைவனாய்க், காண்கொல்லை