முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.021.திருவாக்கூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.021.திருவாக்கூர்

6.021.திருவாக்கூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்.
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
2296 | முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும் கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் |
6.021.1 |
முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய், தாமரைக் கண்ணராய், கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய், தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய், தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய், ஆக்கூரிலே (தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர்) தான்தோன்றியப்பர் உள்ளார்.
2297 | ஓதிற் றொருநூலு மில்லை போலும் காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங் வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும் ஆதிக் களவாகி நின்றார் போலும் |
6.021.2 |
ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்த வராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய், வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய், விடத்தால் சூழப்பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளியுள்ளார்.
2298 | மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் நெய்யார் திரிசூலங் கையார் போலும் வையார் மழுவாட் படையார் போலும் ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும் |
6.021.3 |
மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், நீலகண்டராய், நெய் அணிந்த முத்தலைச்சூலக் கையராய். திருநீறுபூசிய எண் தோளராய், கூரிய மழுப்படையினராய், காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய், ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார்.
2299 | வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும் கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும் அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும். |
6.021.4 |
கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய், அழகிய கங்கை தோய்ந்த சடையினராய், மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சிவழங்குகிறார்.
2300 | ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை மாகாச மாயவெண் ணீருந் தீயும் ஆகாச மென்றிவையு மானார் போலும் |
6.021.5 |
புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல்மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகம் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2301 | மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள் மூதூர் முதுதிரைக ளானார் போலும் தீதூர நல்வினையாய் நின்றார் போலுந் ஆதிரை நாளா வமர்ந்தார் போலும் |
6.021.6 |
காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள், சிவந்த வாய், மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய், ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல்வினை வடிவினராய், எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய், ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார்.
2302 | மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும் காலனைக் காலாற் கடந்தார் போலுங் ஆலானைந் தாடல் உகப்பார் போலும் |
6.021.7 |
பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று, அம்பினை உடைய மன்மதனைத் தம் கண் நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக்கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2303 | கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் உண்ணா அருநஞ்ச முண்டார் போலும் எண்ணா யிரங்கோடி பேரார் போலும் அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் |
6.021.8 |
நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய், ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய், காளையை இவர்ந்து செல்லும் தலைவராய், அண்ணாமலையையும், ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2304 | கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை நெடியான் சதுர்முகனு நேட நின்ற படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி அடியார் புகலிடம தானார் போலும் |
6.021.9 |
புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை, விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன்வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ளதான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2305 | திரையானுஞ் செந்தா மரைமே லானுந் புரையா னெனப்படுவார் தாமே போலும் கரையா வரைவில்லே நாகம் நாணாக் வரையார் மதிலெய்த வண்ணர் போலும் |
6.021.10 |
பாற்கடற்பரமனும், செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும்காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய், போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய், நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாக்கூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஆக்கூரில், தான்றோன்றி, போலும்ஆக்கூரில், காட்சி, போலும், தோன்றியப்பர், வழங்குகிறார், அணிந்த, நின்றார், கொன்றை, கொண்டு, பாம்பு, விண்ணும், காய்ந்தார், செல்லும், பிரமனும், கூற்றிலும், இவர்ந்து, காளையை, நஞ்சினை, உடையவராய்ப், அப்பர், தோய்ந்த, தாமரைக், தான்தோன்றியப்பர், திருச்சிற்றம்பலம், வைத்தார், கல்லலகு, திருமுறை, கையார், வழங்குகின்றார், ஏந்திய, திருவாக்கூர், இடையில், வொளியார், வெள்ளிய