முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.054.திருப்புகலூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.054.திருப்புகலூர்

4.054.திருப்புகலூர்
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
518 | பகைத்திட்டார் புரங்கண் மூன்றும் புகைத்திட்ட தேவர் கோவே அகைத்திட்டங் கதனை நாளு திகைத்திட்டேன் செய்வ தென்னே |
4.054.1 |
திருப்புகலூர் பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது செயற்பாலேன்?
519 | மையரி மதர்த்த வொண்கண் கையெரி சூல மேந்துங் ஐநெரிந் தகமி டற்றே செய்வதொன் றறிய மாட்டேன் |
4.054.2 |
திருப்புகலூர்ப் பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.
520 | முப்பது முப்பத் தாறு அப்பர்போ லைவர் வந்து ஒப்பவே நலிய லுற்றா செப்பமே திகழு மேனித் |
4.054.3 |
செந்நிற மேனியை உடைய திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிபுரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை அடியேன் அறியமாட்டேன்.
521 | பொறியிலா வழுக்கை யோம்பிப் நெறியலா நெறிகள் சென்றே அறிவிலே னமரர் கோவே செறிவிலேன் செய்வ தென்னே |
4.054.4 |
திருப்புகலூர்ப் பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்! நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?
522 | அளியினார் குழலி னார்க களியினார் பாட லோவாக் தளியினார் பாத நாளுந் தௌவிலேன் செய்வ தென்னே |
4.054.5 |
திருப்புகலூர்ப் பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும் பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள்தோறும் விருப்புற்று நினைக்காததும், தகுதியற்றதுமான நெஞ்சம் தௌவு பெறாத அடியேன் யாது செய்வேன்?
523 | இலவினார் மாதர் பாலே நிலவுநாள் பலவென் றெண்ணி உலவிநா னுள்க மாட்டே செலவிலேன் செய்வ தென்னே |
4.054.6 |
திருப்புகலூர்ப் பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன் திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன் அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?
524 | காத்திலே னிரண்டு மூன்றுங் வாய்த்திலே னடிமை தன்னுள் பார்த்தனுக் கருள்கள் செய்த தீர்த்தமே திகழும் பொய்கைத் |
4.054.7 |
பொய்கைகள் விளங்கும் திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞானதேசிகராற் பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன் அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது செயற்பாலேன்?
525 | நீருமாய்த் தீயு மாகி ஏருடைக் கதிர்க ளாகி 2ஆய்வதற் கரிய ராகி தேவர்க்குந் தேவ ராவர் |
4.054.8 |
நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.
526 | மெய்யுளே விளக்கை யேற்றி உய்வதோ ருபாயம் பற்றி ஐவரை யகத்தே வைத்தீ செய்வதொன் றறிய மாட்டேன் |
4.054.9 |
திருப்புகலூர்ப் பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.
527 | அருவரை தாங்கி னானு இருவரு மறிய மாட்டா கருவரை யெடுத்த ஞான்று திருவிரல் சிறிது வைத்தார் |
4.054.10 |
திருப்புகலூர்ப் பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும் அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமானே, திருப்புகலூர்ப், அடியேன், தென்னேதிருப்புக, அல்லேன், செயற்பாலேன், திருப்புகலூர், உடையேன், சிறிது, தேவர்கள், விளக்கை, திருச்சிற்றம்பலம், திருமுறை, ஐம்பொறிகளும், மாட்டேன்திருப்புக, கருதிக், கீழ்மகனாகிய