முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.114.தனி
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.114.தனி

4.114.தனி
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1060 | பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் பவளக்கண் வால மதியெந்தை சூடும் |
4.114.1 |
எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.
1061 | முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி இருகாற் குரம்பை யிதுநா னுடைய தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் |
4.114.2 |
நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக.
1062 | மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக் காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை நாவா யசைத்த வொலியொலி மாறிய தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த |
4.114.3 |
என்னும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக்கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.
1063 | பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட |
4.114.4 |
வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?
1064 | அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய |
4.114.5 |
இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. 'ஐயாறமர்ந்து வந்தென்' 'ஆறமர் செஞ்சடையான்' என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. 'சிந்தி' என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. 'இளங்கண்ணி' எனல் பொருந்தாது.
1065 | உன்மத் தகமலர் சூடி யுலகந் பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் என்மத் தகத்தே யிரவும் பகலும் பிரிவரியான் தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய |
4.114.6 |
தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப்பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.
1066 | அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு இரைப்பா படுதலை யேந்துகை யாமறை உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க |
4.114.7 |
விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.
1067 | துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து |
4.114.8 |
பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது.
1068 | வேரி வளாய விரைமலர்க் கொன்றை சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் வாரி வளாய வருபுனற் கங்கை ஏரி வளாவிக் கிடந்தது போலு |
4.114.9 |
தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது.
1069 | கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் |
4.114.10 |
நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.
1070 | மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி கால னறிந்தா னறிதற் கரியான் |
4.114.11 |
பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமானுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திருமால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடிகளைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.
திருச்சிற்றம்பலம்
நான்காம் திருமுறை முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனி - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமானுடைய, போலவும், அணிந்த, திருமுறை, சென்று, அடியேனுடைய, பிரமன், மேலுலகம், தேவர்கள், அல்லன், கிடக்கும், திருச்சிற்றம்பலம், திருவிருத்தம், பவளத்தின், நறுமணம், நான்காம், கமழும், என்னும்