முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.066.திருவேட்டக்குடி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.066.திருவேட்டக்குடி
3.066.திருவேட்டக்குடி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர்.
தேவியார் - சாந்தநாயகியம்மை.
3503 | வண்டிரைக்கும் மலர்க்கொன்றை கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் |
3.066.1 |
வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார்.
3504 | பாய்திமிலர் வலையோடு காசினியிற் கொணர்ந்தட்டுங் போயிரவிற் பேயோடும் தீயெரிகை மகிழ்ந்தாருந் |
3.066.2 |
வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில், வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க, நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான்.
3505 | தோத்திரமா
மணலிலிங்கந் பாத்திரமா வாட்டுதலும் ஆத்தமென மறைநால்வர்க் தீர்த்தமல்கு சடையாருந் |
3.066.3 |
வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து, தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு, அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான், தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான். அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
3506 | கலவஞ்சேர் கழிக்கானல் அலவஞ்சே ரணைவாரிக் நிலவஞ்சேர் நுண்ணிடைய திலகஞ்சேர் நெற்றியினார் |
3.066.4 |
மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய, கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில், ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு, திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
3507 | பங்கமார் கடலலறப் செங்கண்மால் கடையவெழு அங்கநான் மறைநால்வர்க் திங்கள்சேர் சடையாருந் |
3.066.5 |
சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற, மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி. நால் வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
3508 | நாவாய பிறைச்சென்னி கோவாத நித்திலங்கள் ஏவாரும் வெஞ்சிலையா தேவாதி தேவனார் |
3.066.6 |
சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர். அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும், கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
3509 | பானிலவும் பங்கையத்துப் கானிலவு மலர்ப்பொய்கைக் மானின்விழி மலைமகளோ தேனிலவு மலர்ச்சோலைத் |
3.066.7 |
பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர, பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க, மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும், தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும், தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான்.
3510 | துறையுலவு கடலோதஞ் நறையுலவும் பொழிற்புன்னை இறைபயிலு மிராவணன்றன் திறலழிய வடர்த்தாருந் |
3.066.8 |
கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர்.
3511 | அருமறைநான் முகத்தானு இருவருமா யளப்பரிய வருபுனலின் மணியுந்தி திருவுருவில் வெண்ணீற்றார் |
3.066.9 |
அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின், வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய், சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
3512 | இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் நிகழ்ந்திலங்கு வெண்மணலி திகழ்ந்திலங்கு செஞ்சடையார் |
3.066.10 |
வேதவள்ளியை நிந்தனை செய்யும் சமணர்களும், பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள். ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள்.
3513 | தெண்டிரைசேர் வயலுடுத்த தண்டலைசூழ் கலிக்காழித் ஒண்டமிழ்நூ லிவைபத்து உண்டுடுப்பில் வானவரோ |
3.066.11 |
தௌந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும், ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும், உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேட்டக்குடி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவேட்டக்குடி, திருத்தலத்தில், என்னும், திருவேட்டக், சிவபெருமான், குடியாரே, வீற்றிருந்தருளுகின்றார், கொண்டு, கடற்கரைச், சூழ்ந்த, போற்றி, மேருமலையை, சிவந்த, தேவாதி, வீற்றிருந்தருளுகின்றான், சடையிலே, சிவமூர்த்தி, விளங்கும், சோலைகள், வீற்றிருந்தருளும், நிறைந்த, திருமேனியில், கடலலைகள், சோலைகளும், நால்வர்க்கும், மறைநால்வர்க், சந்திரனைச், பாம்பைக், கொணர்ந்து, அலைகள், அணிந்த, விளங்குகின்ற, ஆரவாரிக்கும், கைதல்சூழ், திருமுறை, சடையில், விளங்க, திருச்சிற்றம்பலம், கழிக்கானல், சடையாருந்