முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.062.திருப்பனந்தாள்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.062.திருப்பனந்தாள்
3.062.திருப்பனந்தாள்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
3460 | கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.1 |
சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன். தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன். மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன். விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய, வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3461 | விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.2 |
சிவபெருமான் நான்குவேதங்களின் பொருளை விரித்து ஓதியவன். தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன். ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன். சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3462 | உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை |
3.062.3 |
சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன். தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன். இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன். பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன். தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும்கோயிலாகும்.
3463 | சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.4 |
பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும், அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும், பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும், நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலை மிகவும் போற்றி வழிபடுவீர்களாக!
3464 | விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை படம்புரி நாகமொடு திரை பன்மணி தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.5 |
சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன். வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன். எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு, அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3465 | விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு புடைபட வாடவல்லான் மிகு பூதமார் தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.6 |
சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன். விண்ணுலகமும், மண்ணுலகமும், மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன். பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன். கொன்றைமாலையோடு, வன்னி, எருக்கம் இவை அணிந்த சடையுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3466 | மலையவன் முன்பயந்த மட மாதையொர் சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை அலைமலி தண்புனலும் மதி யாடர தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.7 |
சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன். மேரு மலையை வில்லாக்கி, அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன். அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும், சந்திரனையும், பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3467 | செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் புற்றர வம்புலியின் னுரி தோலொடு தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.8 |
இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன். முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன். உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன். புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3468 | வின்மலை நாணரவம் மிகு வெங்கன புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை |
3.062.9 |
சிவபெருமான் மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன். நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத தன்மையன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும். அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான்.
3469 | ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி தாதவி ழும்பனந்தாட் டிருத் |
3.062.10 |
பயனிலிகளாகிய சமணர்களும், அழகிய துணிகளைப்போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
3470 | தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை |
3.062.11 |
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில், வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பனந்தாள் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், திருப்பனந்தாள், டிருத், திருத்தாடகையீச்சரம், சிவபெருமான், யீச்சரமே, திருத்தலத்திலுள்ள, திருக்கோயிலாகும், வீற்றிருந்தருளும், அப்பெருமான், னூர்பனந்தாட், உறைவிடம், அணிந்த, உடையவன், பாம்பையும், சூழ்பனந்தாட், சூழ்ந்த, குளிர்ந்த, அழித்தவன், எரித்துச், சந்திரனையும், கங்கையையும், திருக்கோயிலில், முப்புரங்களையும், பலவகையான, போற்றி, கொண்டு, தலைவனான, தோன்றிய, வீற்றிருந்தருளுகின்ற, எரித்தவன், உமாதேவியைத், பெருமையுடைய, கூறுடையான், திருச்சிற்றம்பலம், திருமுறை, கொண்டவன், சிவந்த, திருத்தலத்தில், உடுத்தவன், உயிர்களைச், பிரித்தவன், சடையினையுடைய, ஆடையாக