முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.120.திருஆலவாய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.120.திருஆலவாய்

3.120.திருஆலவாய்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
4090 | மங்கையர்க்
கரசி வளவர்கோன் பாவை பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த |
3.120.1 |
மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி. கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கயற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும்.
4091 | வெற்றவே
யடியா ரடிமிசை வீழும் கொற்றவன் றனக்கு மந்திரி யாய ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற |
3.120.2 |
பற்றற்ற உள்ளத்தோடு, சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும், திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். தேவர்களின் தலைவர். உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.
4092 | செந்துவர்
வாயாள் சேலன கண்ணாள் பந்தணை விரலாள் பாண்டிமா தேவி சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண |
3.120.3 |
மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர். சேல் மீன் போன்ற கண்களை உடையவர். சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய, உலகில் சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள், பாம்பு, கங்கை, ஊமத்தை, குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர், வன்னிமலர், மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.
4093 | கணங்களாய்
வரினுந் தமியராய் வரினு குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண |
3.120.4 |
சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும், தனியராக வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும், கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு, சந்திரன், வன்னி, வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும்.
4094 | செய்யதா
மரைமே லன்னமே அனைய பையரா வல்குற் பாண்டிமா தேவி வெய்யவேற் சூலம் பாசமங் குசமான் ஐயனா ருமையோ டின்புறு கின்ற |
3.120.5 |
சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவரும், அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
4095 | நலமில
ராக நலமதுண் டாக குலமில ராகக் குலமதுண் டாகத் கலைமலி கரத்தன் மூவிலை வேலன் அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண |
3.120.6 |
நல்ல குணங்களை உடையவராயினும், அவை இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார். அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான் ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
4096 | முத்தின்றாழ்
வடமுஞ் சந்தனக் குழம்பு பத்தியார் கின்ற பாண்டிமா தேவி சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே அத்தனா ருமையோ டின்புறு கின்ற |
3.120.7 |
முத்துமாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும், சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் இதுவே.
4097 | நாவணங்
கியல்பா மஞ்செழுத் தோதி கோவணம் பூதி சாதனங் கண்டாற் ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண |
3.120.8 |
நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராய், நல்லியல்புகளை அளிக்கும் கோவணம், விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார். அவர் வழிபாடு செய்கின்ற, பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவபக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
4098 | மண்ணெலா
நிகழ மன்னனாய் மன்னு பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி விண்ணுலா ரிருவர் கீழொடு மேலு அண்ணலா ருமையோ டின்புறு கின்ற |
3.120.9 |
உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார், மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார். அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
4099 | தொண்டரா
யுள்ளார் திசைதிசை தோறுந் கண்டுநா டோறு மின்புறு கின்ற குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த |
3.120.10 |
சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி, அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற, புத்த, சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய, இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தலம் இதுவேயாகும்.
4100 | பன்னலம்
புணரும் பாண்டிமாதேவி அந்நலம் பெறுசீ ராலவா யீசன் கன்னலம் பெரிய காழியுண் ஞான டின்னலம் பாட வல்லவ ரிமையோ |
3.120.11 |
பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி, கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆலவாய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருஆலவாய், என்னும், மிதுவே, திருத்தலம், சிவபெருமான், குலச்சிறை, வீற்றிருந்தருளும், பாண்டிமா, மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், சடைமுடி, வழிபாடு, மகிழ்ந்து, சிவந்த, வழிபடுகின்ற, டின்புறு, போன்று, ருமையோ, இதுவேயாகும், காணும்போது, செய்து, பாண்டிய, போற்றி, உமாதேவியோடு, தேவியார், உடையவருமான, செல்வி, பணிசெய்து, செய்யும், சடைமுடியுடைய, வணங்கி, சந்தனக், மன்னனாய், மணிமுடிச், யுள்ளார், கோவணம், கியல்பா, நாடொறும், திருமுறை, திருச்சிற்றம்பலம், றிருந்த, யாகும், சிவத்தொண்டு, நாயனார், நாள்தோறும், அப்பெருமான், வழிபடும், தலைவர், மன்னனின், உடையவர், கொன்றை, தன்மையுடையவர், கண்டால், பாம்பு, வீற்றிருக்கும், சிறந்த, வந்தாலும்