முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.065.திருப்பிரமபுரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.065.திருப்பிரமபுரம்
2.065.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2167 | கறையணி
வேலிலர் போலுங் மறையு நவின்றிலர் போலு பறையுங் கரத்திலர் போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் |
2.065. 1 |
பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூப நிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள் யாவும் உறுதிப் படுமாற்றை உணரலாம்.
2168 | கூரம்
பதுவிலர் போலுங் ஆரமும் பூண்டிலர் போலு தாருஞ் சடைக்கிலர் போலுஞ் பேரும் பலவிலர் போலும் |
2.065. 2 |
பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர்.
2169 | சித்த
வடிவிலர் போலுந் கத்தி வருங்கடுங் காளி மெய்த்த நயன மிடந்தார்க் பித்த வடிவிலர் போலும் |
2.065.3 |
பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர்.
2170 | நச்சர
வாட்டிலர் போலு கச்சுத் தரித்திலர் போலுங் மொய்ச்சவன் பேயிலர் போலு பிச்சை யிரந்திலர் போலும் |
2.065. 4 |
பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய பாம்பைப் பிடித்து ஆடச் செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர்.
2171 | தோடு
செவிக்கிலர் போலுஞ் ஆடு தடக்கை வலிய ஓடு கரத்திலர் போலு பீடு மிகுத்தெழு செல்வப் |
2.065. 5 |
பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர்.
2172 | விண்ணவர்
கண்டிலர் போலும் அண்ண லயன்றலை வீழ வண்ண வெலும்பினொ டக்கு பெண்ணின மொய்த்தெழு செல்வப் |
2.065.6 |
மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர்.
2173 | பன்றியின்
கொம்பிலர் போலும் கன்றிய காலனை வீழக் துன்று பிணஞ்சுடு காட்டி பின்றியும் பீடும் பெருகும் |
2.065.7 |
பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித்திளைப்பவர்.
2174 | பரசு
தரித்திலர் போலும் அரச னிலங்கையர் கோனை புரைசெய் புனத்திள மானும் பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த |
2.065.8 |
தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர்.
2175 | அடிமுடி
மாலயன் றேட கடிமல ரைங்கணை வேளைக் படிமலர்ப் பாலனுக் காகப் பிடிநடை மாதர் பெருகும் |
2.065.9 |
பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.
2176 | வெற்றரைச்
சீவரத் தார்க்கு அற்றவ ரானிழ னால்வர்க் உற்றல ரொன்றிலர் போலு பெற்றமு மூர்ந்திலர் போலும் |
2.065.10 |
பிரமவுரம் பெருமான், வெற்றுடலோடும், சீவரம் அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப் பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத் தோன்றுபவர். தலையோட்டை முடியில் தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.
2177 | பெண்ணுரு
வாணுரு வல்லாப் அண்ணல்செய் யாதன வெல்லா நண்ணிய ஞானசம் பந்த விண்ணவ ரோடினி தாக |
2.065.11 |
பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத (மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போலும், புரமமர்ந், பெருமான், பிரமபுரம், அமர்ந்த, தரித்தவர், போலுங், உடையவர், தரித்திலர், கையில், அணிந்தவர், போலுந், செல்வப், பெருகும், முடியில், நஞ்சினை, தலையோட்டைக், ஏந்தியவர், கால்கொடு, செறிந்த, சூழ்ந்த, பிச்சை, மலர்கள், பன்றியின், பூண்டிலர், பிடித்திலர், சடைக்கிலர், கரத்திலர், திருச்சிற்றம்பலம், திருமுறை, நிலையில், பொருந்திய, கருளிலர், வடிவிலர், போலுஞ், திருப்பிரமபுரம், பிடித்தவர், வடிவம்