முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.049.சீகாழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.049.சீகாழி
2.049.சீகாழி
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1993 | பண்ணி
னேர்மொழி மங்கை மார்பலர் கண்ணி னேரயலே பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு அண்ண லாரடியார் |
2.049. 1 |
பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர்.
1994 | மொண்ட
லம்பிய வார்தி ரைக்கடல் கண்டலம் புடைசூழ் வண்ட லம்பிய கொன்றை யானடி விண்ட லங்கௌதாம் |
2.049. 2 |
நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும்.
1995 | நாடெ
லாமொளி யெய்த நல்லவர் காடெ லாமலர் தோடு லாவிய காது ளாய்சுரி வேடங் கொண்டவர்கள் |
2.049. 3 |
நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.
1996 | மையி
னார்பொழில் சூழ நீழலில் கையி னார்மலர் ஐய னேயர னேயென் றாதரித் உய்யு மாறுலகில் |
2.049. 4 |
கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர் கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே அரனே என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர்.
1997 | மலிக
டுந்திரை மேனி மிர்ந்தெதிர் கலிக டிந்தகையார் வலிய காலனை வீட்டி மாணிதன் மெலியுந் தீவினைநோய் |
2.049. 5 |
நிறைந்து விரைந்து வரும் வரும் அலைகளில் எதிர் வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலிய காலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.
1998 | மற்று
மிவ்வுல கத்து ளோர்களும் கற்ற சிந்தையராய்க் நெற்றி மேலமர் கண்ணி னானை செற்றமாந் தரெனத் |
2.049. 6 |
இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைக் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தௌவீர்களாக.
1999 | தான
லம்புரை வேதிய ரொடு கானலின் விரைசேர ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற றானலங் கொடுப்பார் |
2.049.7 |
நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப் பதியுள் ஊனுடம்புடையோர் உயிர் வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்ததினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.
2000 | மைத்த வண்டெழு
சோலை யாலைகள் கத்து வார்கடல் சென் அத்த னேயர னேய ரக்கனை பத்தராய்ப் பரவும் |
2.049. 8 |
வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.
2001 | பரும
ராமொடு தெங்கு பைங்கத கருவரா லுகளும் திருவி னாயக னாய மாலொடு இருவர் காண்பரியா |
2.049. 9 |
பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.
2002 | பிண்ட
முண்டுழல் வார்க ளும்பிரி கண்டு சேரகிலார் தொண்டை வாயுமை யோடு கூடிய அண்டவா ணனென்பார்க் |
2.049. 10 |
சோற்றுத் திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே என்பாரை அல்லல்கள் அடையா.
2003 | பெயரெ
னும்மிவை பன்னி ரண்டினு கயலுலாம் வயல்சூழ்ந் நயன டன்கழ லேத்தி வாழ்த்திய உயருமா மொழிவார் |
2.049. 11 |
பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீகாழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலிக்காழி, விளங்கும், காழிப்பதியில், வைகலும், வைகலுங், நிறைவதும், ளோர்களும், திருவடிகளைப், பெற்றதும், வாழ்த்திய, கலிக்காழித், நீங்கப், காழிப்பதியுள், வண்டுகள், பலகாலும், றென்றுன்னும், திருச்சிற்றம்பலம், திருமுறை, லம்பிய, கொன்றை, ஒலிக்கும், சீகாழி, மாந்தர், காதினர்