முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.045.திருக்கைச்சினம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.045.திருக்கைச்சினம்
2.045.திருக்கைச்சினம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைச்சினநாதர்.
தேவியார் - வேள்வளையம்மை.
1950 | தையலோர்
கூறுடையான் மையுலா மணிமிடற்றான் நெய்யுலா மூவிலைவேல் கையுடையான் மேவியுறை |
2.045. 1 |
மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய் பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.
1951 | விடமல்கு
கண்டத்தான் படமல்கு பாம்பரையான் நடமல்கு மாடலினான் கடமல்கு மாவுரியான் |
2.045. 2 |
விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்த தோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம்.
1952 | பாடலார்
நான்மறையான் சூடலான் வெண்மதியந் ஆடலா னங்கை காடலான் மேவியுறை |
2.045. 3 |
பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1953 | பண்டமரர்
கூடிக் சுண்டபிரா னென்றிறைஞ்சி விண்டவர்கள் தொன்னகர கண்டபிரான் மேவியுறை |
2.045. 4 |
முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவி உறையும் கோவில் கைச்சினம்.
1954 | தேய்ந்துமலி
வெண்பிறையான் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் சாய்ந்தமரர் வேண்டத் காய்ந்தபிரான் மேவியுறை |
2.045. 5 |
தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்த திருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப் பெரியகடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1955 | மங்கையோர்
கூறுடையான் அங்கையோர் வெண்டலையா திங்களொடு பாம்பணிந்த கங்கையினான் மேவியுறை |
2.045. 6 |
மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1956 | வரியரவே
நாணாக எரிகணையான் முப்புரங்க பொரிசுடலை யீமப் கரியுரியான் மேவியுறை |
2.045. 7 |
வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற் பொறியைத் தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1957 | போதுலவு
கொன்றை மாதுமையா ளஞ்ச நீதியினா லேத்த காதலினான் மேவியுறை |
2.045. 8 |
உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதி அவனை முன்போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்பமுடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம்.
1958 | மண்ணினைமுன்
சென்றிரந்த எண்ணறியா வண்ண பண்ணிசையா லேத்தப் கண்ணுடையான் மேவியுறை |
2.045. 9 |
மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
1959 | தண்வயல்சூழ்
காழித் கண்ணுதலான் மேவியுறை பண்ணிசையா லேத்திப் விண்ணவரா யோங்கி |
2.045. 11 |
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓத வல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கைச்சினம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயில், உறையும், மேவியுறை, கைச்சினமே, கைச்சினம், சிவபிரான், கூறுடையான், சிவபெருமான், ஆடுபவனும், தோன்றிய, கடைந்த, தேவர்கள், திருமுடிமேல், கைச்சினத்தைப், பண்ணிசையோடு, பண்ணிசையா, இடுகாட்டில், நஞ்சினை, எரித்தவனும், பிறைமதி, குளிர்ந்த, திருச்சிற்றம்பலம், திருமுறை, வெண்மையான, பாம்பினை, சூடியவனும், திருக்கைச்சினம், முப்புரங்களை, கையில்