முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.115.திருப்புகலூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.115.திருப்புகலூர்
2.115.திருப்புகலூர்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
2714 |
வெங்கள்விம்மு குழலிளைய பொங்குசெங்கட் கருங்கயல்கள் திங்கள்சூடித் திரிபுரம்ஓர் எங்கள்பெம்மான் அடிபரவ |
2.115. 1 |
விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்கள் ஓரம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும்.
2715 |
வாழ்ந்தநாளும் இனிவாழு வீழ்ந்தநாளெம் பெருமானை போழ்ந்ததிங்கட் புரிசடையி சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள் |
2.115. 2 |
இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும்.
2716 | மடையின்நெய்தல்
கருங்குவளை புடைகொள்செந்நெல் விளைகழனி தொடைகொள்கொன்றை புனைந்தானொர் அடையவல்லவர் அமருலகம் |
2.115. 3 |
மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர் ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர்.
2717 |
பூவுநநீரும் பலியுஞ் நாவினாலே நவின்றேத்த யாவுங்கேளார் அவன்பெருமை ஓவும்நாளும் உணர்வொழிந்த |
2.115. 4 |
பூவும், நீரும், நிவேதனப் பொருள்களும் எடுத்துவந்து புகலூரை அடைந்து, அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று, ஏத்த வல்லவராய், செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர்.
2718 | அன்னங்கன்னிப்
பெடைபுல்கி பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன முன்னம்மூன்று மதிலெரித்த இன்னரென்னப் பெரிதரியர் |
2.115. 5 |
அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில், முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர்.
2719 |
குலவராகக் குலமிலரும் உலகினல்ல கதிபெறுவ புலவமெல்லாம் வெறிகமழும் நிலவமல்கு சடையடிகள் |
2.115. 6 |
உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர். ஆதலின், அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால், புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற, அழகிய புகலூரில் பிறையணிந்த சடையுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள்.
2720 |
ஆணும்பெண்ணும் மெனநிற்ப பூணுமேனும் புகலூர்தனக் ஊணும்ஊரார் இடுபிச்சை பேணுமேனும் பிரானென்ப |
2.115. 7 |
புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும், பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும், ஊரார் இடும்பிச்சையை ஏற்று உண்பவரேனும், கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும், அடியவர் அவரையே பிரான் என்பர்.
2721 |
உய்யவேண்டில் எழுபோத கைகளொல்கக் கருவரை செய்கைதோன்றச் சிதைத்தருள பொய்கைசூழ்ந்த புகலூர் |
2.115. 8 |
நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக; உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும்.
2722 |
நேமியானும் முகநான் ஆமிதென்று தகைந்தேத்தப் சாமிதாதை சரணாகு பூமியெல்லாம் புகழ்செல்வம் |
2.115. 9 |
சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன், என்று தலைதாழ்த்தி வணங்குமின் உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும்.
2723 |
வேர்த்தமெய்யர் உருவத் போர்த்தகூறைப் போதிநீழ தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த ஓர்த்துமெய்யென் றுணராது |
2.115. 10 |
வியர்வை தோன்றிய உடலினோரும், உடலில் உடையின்றித்திரிபவரும், ஆடையைப் போர்த்திக் கொண்டு அரசமரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து, புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின்.
2724 | புந்தியார்ந்த பெரியோர்கள் வெந்தசாம்பற் பொடிப்பூச அந்தமில்லா அனலாட பந்தன்சொன்ன தமிழ்பாடி |
2.115. 11 |
அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் விடையூர்த்தியனும்,, அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி, ஆடிப் போற்ற, பாவம் கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புகலூரில், லூர்தனுள், ஏத்தும், பெருமானை, புகலூரையே, கருதுங்கால், என்றும், புகலூரை, கோவணம், கொண்டு, பெரியோர்கள், புகலூர்தனுள், திருமுறை, எம்பெருமானை, பெருமான், விளங்கும், கெடும், திருச்சிற்றம்பலம், நாளையும், திருப்புகலூர், வாழும்