முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.114.திருக்கேதாரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.114.திருக்கேதாரம்

2.114.திருக்கேதாரம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - கேதாரேசுவரர்.
தேவியார் - கௌரியம்மை.
2703 |
தொண்டரஞ்சு களிறும் இண்டைகட்டி வழிபாடு வண்டுபாட மயிலால கெண்டைபாயச் சுனைநீல |
2.114. 1 |
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும்.
2704 |
பாதம்விண்ணோர் பலரும் வேதநான்கும் பதினெட்டொ தாதுவிண்ட மதுவுண்டு கீதம்பாட மடமந்தி |
2.114. 2 |
விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும்.
2705 | முந்திவந்து
புரோதாய எந்தைபெம்மா னெனநின்றி மந்திபாயச் சரேலச் கெந்தநாறக் கிளருஞ் |
2.114. 3 |
முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம், மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும்.
2706 |
உள்ளமிக்கார்
குதிரைம் எள்கலில்லா இமையோர்கள் பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து |
2.114. 4 |
தியான பலம் உடையோரும், குதிரை முகமுடைய கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும்.
2707 |
ஊழியூழி யுணர்வார்கள் வாழியெந்தை யெனவந்தி மேழிதாங்கி யுழுவார்கள் கேழல்பூழ்தி கிளைக்க |
2.114. 5 |
பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும்.
2708 |
நீறுபூசி நிலத்துண்டு தேறுசிந்தை யுடையார்கள் ஏறிமாவின் கனியும்பலா கீறிநாளும் முசுக்கிளையோ |
2.114. 6 |
நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை உண்டு, நீண்ட மலையின்மேல் தௌந்த சிந்தை உடையவர்களான தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும்.
2709 |
மடந்தைபாகத் தடக்கிம் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க உடைந்தகாற்றுக் குயர்வேங்கை கிடந்தவேங்கை சினமாமுகஞ் |
2.114. 7 |
சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும், மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர் வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும்.
2710 |
அரவமுந்நீர் அணியிலங்கைக் வெருவவூன்றி விரலா குரவங்கோங்கங் குளிர்பிண்டி கிரமமாக வரிவண்டு |
2.114. 8 |
கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல், சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும்.
2711 |
ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த தாழ்ந்துதந்தம் முடிசாய வீழ்ந்து செற்றுந் நிழற்கிரங்கும் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண |
2.114. 9 |
பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்துதம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும்.
2712 |
கடுக்கள்தின்று கழிமீன் இடுக்கணுய்ப்பா ரவரெய்த அடுக்கநின்றவ் வறவுரைகள் கெடுக்கநின்ற பெருமான் |
2.114. 10 |
துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும், மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம், அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும்.
2713 | >
வாய்ந்தசெந்நெல் விளைகழனி ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் வேந்தராகி யுலகாண்டு |
2.114. 11 |
வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், நீர் அருவிகளை உடையதும், இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர். வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 112 | 113 | 114 | 115 | 116 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கேதாரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கேதாரமே, திருக்கேதாரமாகும், அடியவர், சேரும், கேதாரமாகும், மிடமென்பரால், மரங்களில், நின்றார்க், இடமென்பரால், வாழும், அவற்றின், வீழ்ந்து, வீடுகதி, வல்லவர், உறைகின்ற, பெருமான், கிடமென்பரால், கேட்டு, கொண்டு, வண்டுகள், வழிபாடு, திருச்சிற்றம்பலம், திருமுறை, விளங்கும், கீதம்பாட, றைஞ்சும், திருக்கேதாரம், மந்திகள், சிவபிரானுக்கு, இமையோர்கள்