முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.108.திருவிற்குடிவீரட்டானம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.108.திருவிற்குடிவீரட்டானம்
2.108.திருவிற்குடிவீரட்டானம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - மைவார்குழலியம்மை.
2638 |
வடிகொள் மேனியர் வானமா மதியினர் கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை |
2.108. 1 |
தௌவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியருவம், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புலித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.
2639 |
களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் விளங்கு மேனியர் எம்பெரு மானுறை வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் |
2.108.2 |
களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமையரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார்.
2640 |
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் |
2.108. 3 |
கரிய கண்டத்தினரும், வெண்மையான திருநீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத்தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.
2641 |
பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு வேதம் ஓதிய நாவுடை யானிடம் சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி |
2.108. 4 |
பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ?
2642 |
கடிய ஏற்றினர் கனலன மேனியர் இடிய மால்வரை கால்வளைத் தான்றன வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை படிய தாகவே பரவுமின் பரவினாற் |
2.108.5 |
விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின், பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.
2643 |
பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் அண்ண லன்புசெய் வாரவர்க் கௌயவர் விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் |
2.108.6 |
மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.
2644 |
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் |
2.108. 8 |
இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா.
2645 | செங்கண்
மாலொடு நான்முகன் தேடியுந் எங்கு மாரெரி யாகிய இறைவனை வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் |
2.108.9 |
திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப் போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.
2646 |
பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் |
2.108. 10 |
அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர்.
2647 | விலங்க
லேசிலை யிடமென வுடையவன் திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் |
2.108. 11 |
மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள், மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிற்குடிவீரட்டானம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விற்குடி, வீரட்டம், உறையும், மேனியர், விளங்கும், வீரட்டத்தை, கையினர், நோய்கள், அரியவர், பற்றறும், மேலுள்ள, பரவுமின், உடையவர், இலங்கையர், குணத்தாரே, சோதியை, இறைவனை, கயிலாய, மால்வரை, இருளார்ந்த, சூழ்ந்த, வீரட்டத்தைப், அருளிய, பெருமையர், கொன்றை, யடையாவே, திருமுறை, திருச்சிற்றம்பலம், போர்த்து, வீரட்டத்தைச், நெஞ்சினர்க், தீவினை, திருவிற்குடிவீரட்டானம், சிவபிரான், கண்டத்தர், தோன்றிய