முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.106.திருவலஞ்சுழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.106.திருவலஞ்சுழி
2.106.திருவலஞ்சுழி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தீசநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2616 |
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் |
2.106. 1 |
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?
2617 | விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ |
2.106. 2 |
கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும்.
2618 |
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன பரிந்து காப்பன பத்தியில் வருவன மருந்து மாவன மந்திர மாவன இருந்த நாயக னிமையவ ரேத்திய |
2.106. 3 |
திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன.
2619 |
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய |
2.106.4 |
நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளியவரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தையாம் இன்னதென அறியேம்.
2620 |
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ |
2.106.5 |
சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் அவர்தம் இணையடி தொழபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர்.
2621 |
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் இருவ ராதரிப் பார்பல பூதமும் அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே |
2.106.6 |
அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால் அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர்.
2622 |
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று |
2.106.7 |
அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல் வருபவர். இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம். பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள்.
2623 |
குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் பயில வல்லவர் பரகதி காண்பவர் |
2.106. 8 |
குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர் காணார்.
2624 |
அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு |
2.106.9 |
நான்முகனும், திருமாலும் திருமுடியையும், திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார் தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர்.
2625 |
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் நெறிய லாதன கூறுவர் மற்றவை மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி |
2.106. 10 |
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும்.
2626 | மாதொர்
கூறனை வலஞ்சுழி மருவிய நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் |
2.106.11 |
மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலஞ்சுழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வலஞ்சுழி, திருவலஞ்சுழி, கொண்டு, இடமாகக், திருவலஞ்சுழியை, வலஞ்சுழியில், திருமேனியர், முதலான, அவர்தம், கூற்று, வல்லவர், அல்லவர், மருவிய, வாழும், வருபவர், அடியவர்களை, கையில், அகப்பொருட்டுறை, காப்பன, காவிரி, பாடியும், நல்வினைப், திருச்சிற்றம்பலம், திருமுறை, சூழ்ந்த, இறைவனைப், வினைகள், மருந்து, விளங்கும், இறைவனை, வழிபடும், இமையவர்