முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.105.திருக்கீழ்வேளூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.105.திருக்கீழ்வேளூர்
2.105.திருக்கீழ்வேளூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர்.
தேவியார் - வனமுலைநாயகியம்மை.
2605 |
மின்னு லாவிய சடையினர் விடையினர் பன்னு லாவிய மறையொலி நாவினர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை |
2.105. 1 |
ன்னலைப்போல ஒளிவிடும் சடையினரும், விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும்.
2606 |
நீரு விய சடையிடை யரவொடு வாரு லாவிய வனமுலை யவளொடு ஏரு லாவிய விறைவன துறைவிட சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் |
2.105. 2 |
கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும். இத்தலத்தைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போகும்.
2607 |
வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு பண்ணி லாவிய பாடலோ டாடலர் பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா |
2.105. 3 |
வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரிசடையில் அரவு, வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து, இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண்ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலைபெற்றிருப்பர்.
2608 |
சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் நாடு லாவிய பலிகொளு நாதனார் பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் நீடு லாவிய நிமலனைப் பணிபவர் |
2.105. 4 |
பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர்.
2609 |
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை மன்று லாவிய மாதவ ரினிதியன் நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை |
2.105.5 |
நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம்.
2610 |
கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் தொத்து லாவிய நூலணி மார்பினர் பித்து லாவிய பத்தர்கள் பேணிய முத்து லாவிய வித்தினை யேத்துமின் |
2.105. 6 |
பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும், கூத்தனும், நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும், முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின். வலிந்துவரும் இடர்போகும்.
2611 |
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் கறைநி லாவிய கண்டரெண் டோளினர் மறைநி லாவிய வந்தணர்மலிதரு நிறைநி லாவிய வீசனை நேசத்தால் |
2.105.7 |
பிறையணிந்த சடைமுடியில் கங்கை, வன்னி ஆகியவற்றை அணிந்தவனும், கறைக் கண்டனும், எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும்.
2612 |
மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் கலைநி லாவிய நாவினர்கா தல்செய் நிலைநி லாவிய வீசனை நேசத்தா |
2.105. 8 |
திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும், அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும், கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினைபோகும்.
2613 |
மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் |
2.105.9 |
மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும், பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள் நம்மை அடையா.
2614 |
சீறு லாவிய தலையினர் நிலையிலா வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் ஏறு லாவிய கொடியனை யேதமில் பேறு லாவிய பெருமையன் றிருவடி |
2.105. 10 |
மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும்.
2615 |
குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி |
2.105. 11 |
கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தௌந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல் உறுதி.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கீழ்வேளூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கீழ்வேளூர்ப், பெருந்திருக், விளங்கும், கீழ்வேளூர், பெருந்திருக்கோயிலில், சென்று, கோயின்மன்னு, பெருமானை, ஆகியவற்றை, அணிந்து, வினைபோமே, வினைகள், விளங்குபவனும், தேய்வது, பெருங்கோயிலில், சிவகதி, சிவபெருமான், நிமலனை, கண்டனும், பெருந்திருக்கோயிலுள், அந்தணர், நினைபவர், உலாவும், கோயிலெம், புகழ்மிக்க, நாவினர், திருச்சிற்றம்பலம், திருமுறை, யரவொடு, தலைமாலை, லாவிநின், திருக்கீழ்வேளூர், பாகனைப், போகும், நிறைந்த