முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.103.திருஅம்பர்த்திருமாகாளம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.103.திருஅம்பர்த்திருமாகாளம்
2.103.திருஅம்பர்த்திருமாகாளம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்.
தேவியார் - பட்சநாயகியம்மை.
2583 |
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் |
2.103. 1 |
பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா.
2584 |
அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் |
2.103. 2 |
பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர், புலித்தோலை ஆடையாக உடுப்பவர். அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர், அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன. வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமாகாளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர்.
2585 |
குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை |
2.103.3 |
அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின், பூதகணங்கள் பாடவும், அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப்பெருமான்நம், கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான். அவ்விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா.
2586 |
எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை கங்கு லும்பக லுந்தொழு மடியவர் |
2.103.4 |
மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும், அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம் கமழும் கொன்றைமாலை, தாமம், கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர்.
2587 | நெதிய
மென்னுள போகமற் றென்னுள கதிய மென்னுள வானவ ரென்னுளர் மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் |
2.103. 5 |
திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும், அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறுநிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ?
2588 |
கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் தெண்ணி லாவொடு திலதமு நகுதலை மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் |
2.103. 6 |
கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர்.
2589 | >
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் |
2.103.7 |
தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடையாகும். கொன்றையே அவர்தம் கண்ணி, பூசுவது வெண்பொடி. புகழை விரும்புபவர். அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர்.
2590 |
பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை |
2.103.8 |
கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம். அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும்.
2591 | உய்யுங்
காரண முண்டென்று கருதுமி பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் மையுலாம்பொழி லரிசின் வடகரை கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் |
2.103.9 |
கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள். நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார். அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர்.
2592 | பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் |
2.103. 10 |
மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப்பவரும், மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும், பீலிகொண்டு உழல்வோரும், கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும், கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங்களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம்.
2593 | மாறு தன்னொடு
மண்மிசை யில்லது தீறு மாதியு மாகிய சோதியை நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் |
2.103. 11 |
இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை, விடை ஏறும் பெருமானை, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும், கேட்போரையும் குற்றங்கள் குறுகா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅம்பர்த்திருமாகாளம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மாகாளம், வருபுனன், லரிசிலின், தவர்மேய, அரிசிலாற்றின், வடகரையில், திருமாகாளத்தில், அவர்தம், உறையும், கொண்டு, இவ்வுலகில், லாம்பொழி, பெருமானை, தோய்பொழி, குற்றங்கள், பொருந்திய, பொன்னிறம், சூழ்ந்த, கதிரொளி, வழிபடும், திங்கள், லுந்தொழு, திருச்சிற்றம்பலம், றவர்மேய, சோதியை, இல்லாத, தன்னொடு, திருமுறை, மென்னுள, பரவுதல், பெருமையைப், அணிந்த, பெருமான், திருஅம்பர்த்திருமாகாளம், எழுந்தருளிய, அம்பர், பகலும், தொழும், திருமாகாளத்தை, நறுங்கொன்றை, பொழில், ஆகியவற்றை, தோயும், மடியவர், யடையாவே, இரவும்