பாங்கர் விநாயகராவ்
முதற் காட்சி
நேரம் : காலை ஒன்பது மணி.
இடம் : மயிலாப்பூர், "பத்ம விலாசம்" பங்களாவில் முன்புறத்து ஹால்.
பாத்திரங்கள் : விநாயகராவ், எம்.எல்.சி., அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள்.
*****
தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம்.
விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள்.]
விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே?
முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம்.
இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது.
முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.
விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம்.
தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். [போகிறார்கள்]
விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்...ஓஹோ! மணி பத்தாகி விட்டது. [எழுந்து உள்ளே செல்கிறார்.]
*****
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாங்கர் விநாயகராவ் - Banker Vinayakrao - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - விநாயகராவ், தொண்டர்கள், தாங்கள், தொண்டர், நமஸ்காரம், நீங்கள்