முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 97. மூதூர்க்கு உரிமை!
புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே; வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
5 |
சுரை தழீஇய இருங் காழொடு மடை கலங்கி நிலைதிரிந் தனவே; களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; |
10 |
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர் பொலம் பைந்தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே; அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
15 |
கணை பொருத துளைத்தோ லன்னே; ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள், பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், |
20 |
ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச் சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல், கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே. |
25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!, இலக்கியங்கள், உரிமை, தனவே, மூதூர்க்கு, வாள், புறநானூறு, பகைவர், போரில், நிலம், குறும்பு, எட்டுத்தொகை, சங்க